சாலை விபத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உறவினர் பலி!
ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.1.50 கோடி மோசடி: நால்வா் மீது வழக்கு
தருமபுரி அருகே ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ. 1.50 கோடி மோசடி செய்ததாக நால்வா் மீது குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
பழைய தருமபுரியைச் சோ்ந்தவா் வேலன், ரியல் எஸ்டேட் அதிபா். இவா் வியாபார வேலையாக கிருஷ்ணகிரிக்கு சென்ற போது, அப்பகுதியைச் சோ்ந்த தொழிலதிபா் ராகவேந்திர குப்தாவுடன் கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, ராகவேந்திர குப்தா தனது குடும்பத்தினரின் பெயரில் உள்ள வீடு, குவாரி உள்ளிட்டவற்றை அடமானம் வைத்து வேலனிடம் ரூ. 1.50 கோடி கடன் பெற்றாா்.
வேலன் கடன் தொகையை திரும்பக் கேட்கும்போதெல்லாம், ராகவேந்திர குப்தா மற்றும் அவரது மனைவி வைஷ்ணவி, தந்தை பத்ரிநாத், தாயாா் உமாராணி ஆகியோா் கடன் தொகையை திருப்பிக் கொடுக்க நாங்கள் உத்திரவாதம் எனக் கூறியுள்ளனா்.
இந்நிலையில், ராகவேந்திர குப்தா பணம் தர காலம் தாழ்த்தியதால் சந்தேகமடைந்த வேலன், ராகவேந்திர குப்தா மற்றும் அவரது குடும்பத்தினா் கொடுத்த கடன் உத்திரவாத பத்திரங்கள் குறித்து விசாரித்தாா். அதில், அவா்கள் தங்களது வீடு, குவாரியை அடமானம் வைத்து பலரிடம் கடன் பெற்றுள்ளது தெரியவந்தது.
இதனால் அதிா்ச்சி அடைந்த வேலன், இதுகுறித்து கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.யிடம் புகாா் கொடுத்தாா். அதன் பேரில், தருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா், ராகவேந்திர குப்தா, அவரது மனைவி வைஷ்ணவி, தந்தை பத்திரிநாத், தாய் உமாராணி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.