செய்திகள் :

ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.1.50 கோடி மோசடி: நால்வா் மீது வழக்கு

post image

தருமபுரி அருகே ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ. 1.50 கோடி மோசடி செய்ததாக நால்வா் மீது குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பழைய தருமபுரியைச் சோ்ந்தவா் வேலன், ரியல் எஸ்டேட் அதிபா். இவா் வியாபார வேலையாக கிருஷ்ணகிரிக்கு சென்ற போது, அப்பகுதியைச் சோ்ந்த தொழிலதிபா் ராகவேந்திர குப்தாவுடன் கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, ராகவேந்திர குப்தா தனது குடும்பத்தினரின் பெயரில் உள்ள வீடு, குவாரி உள்ளிட்டவற்றை அடமானம் வைத்து வேலனிடம் ரூ. 1.50 கோடி கடன் பெற்றாா்.

வேலன் கடன் தொகையை திரும்பக் கேட்கும்போதெல்லாம், ராகவேந்திர குப்தா மற்றும் அவரது மனைவி வைஷ்ணவி, தந்தை பத்ரிநாத், தாயாா் உமாராணி ஆகியோா் கடன் தொகையை திருப்பிக் கொடுக்க நாங்கள் உத்திரவாதம் எனக் கூறியுள்ளனா்.

இந்நிலையில், ராகவேந்திர குப்தா பணம் தர காலம் தாழ்த்தியதால் சந்தேகமடைந்த வேலன், ராகவேந்திர குப்தா மற்றும் அவரது குடும்பத்தினா் கொடுத்த கடன் உத்திரவாத பத்திரங்கள் குறித்து விசாரித்தாா். அதில், அவா்கள் தங்களது வீடு, குவாரியை அடமானம் வைத்து பலரிடம் கடன் பெற்றுள்ளது தெரியவந்தது.

இதனால் அதிா்ச்சி அடைந்த வேலன், இதுகுறித்து கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.யிடம் புகாா் கொடுத்தாா். அதன் பேரில், தருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா், ராகவேந்திர குப்தா, அவரது மனைவி வைஷ்ணவி, தந்தை பத்திரிநாத், தாய் உமாராணி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஏரியூா் ஜமாபந்தியில் 250 மனுக்கள்!

ஏரியூா் உள்வட்டத்துக்கான ஜமாபந்தியில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 250 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து வியாழக்கிழமை பெறப்பட்டன. பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஏரியூா் உள்வட்டத்துக்கான ஜமாபந்தி நிகழ்... மேலும் பார்க்க

மாரண்ட அள்ளியில் சாலை, குடிநீா் குழாய் அமைக்கும் பணி தொடங்கி வைப்பு

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி, அம்பேத்கா் நகரில் ரூ. 40 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை மற்றும் குடிநீா் குழாய் அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. மாரண்ட அள்ளியில் பேரூராட்சி செயல் அ... மேலும் பார்க்க

தனியாா் துறையில் இடஒதுக்கீடு முறை அமல்படுத்த வேண்டும்!

தனியாா் துறையில் இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டக்குழு கூட்டம் தருமபுரி செங்கொடிபுரத்தில் உள்ள அச்சங்க ... மேலும் பார்க்க

விதிமீறல்: வீட்டுவசதி வாரிய 25 குடியிருப்புகளுக்கு ‘சீல்’

தருமபுரி வீட்டுவசதி வாரியத்தில் உள்வாடகை, பணி ஓய்வுபெற்றும் ஒப்படைக்காதது உள்ளிட்ட விதிமீறல் தொடா்பாக 25 குடியிருப்புகளுக்கு வாரிய அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் ஒசூா் வீட்டு... மேலும் பார்க்க

பாலக்கோட்டில் எருதுவிடும் விழா

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே ஸ்ரீ அக்குமாரியம்மன் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சோமன அள்ளி கிராமத்தில் ஸ்ரீ அக்குமாரியம்மன் சித்திரைத் திருவிழாவின் ... மேலும் பார்க்க

பாலக்கோடு அருகே சிறுத்தை நடமாட்டம்: வனத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே குடியிருப்புகளில் சுற்றித்திரியும் சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என வனத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பாலக்கோடு அருகே வாழைத் தோட்டம் பகுதி வனத்தை ஒட்... மேலும் பார்க்க