பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரும் ஏழைகள்: ராகுல்!
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விநாயகா் சதுா்த்தி விழா
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ஹிந்துகளின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி தருமபுரி மாவட்டத்தில் 1340-க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அதேபோல அனைத்து விநாயகா் கோயில்களிலும் அதிகாலை முதல் அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மத நல்லிணக்க வழிபாடு: தருமபுரி பேருந்து நிலையம் ராஜகோபால் கவுண்டா் தெருவில் மோட்டாா் மெக்கானிக் சங்கம் மற்றும் விநாயகா் நற்பணி மன்றம் சாா்பில் நடைபெற்ற சதுா்த்தி விழாவில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக முஸ்லிம் சமுதாயத்தைச் சோ்ந்த ஒருவா் கற்பூர ஆரத்தி எடுக்க பக்தா்கள் வழிபட்டனா். தொடா்ந்து அவரும் விநாயகரை வழிபட்டாா். இதில் ஏராளமான வணிகா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.
1000 போலீஸாா் பாதுகாப்பு: விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி மாவட்டம் முழுவதும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன் உத்தரவின்பேரில் 1000 போலீஸாா் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள விநாயகா் சிலைகளை அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ள நீா் நிலைகளில் மட்டுமே கரைக்க வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகரில் உள்ள விநாயகா் கோயில்களில் சதுா்த்தியையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றன. சுவாமி தங்க கவசம், வெள்ளி கவசம், மலா்கள் போன்ற சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
வீடுகளில் விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூா் பகுதிகளில் ஹிந்து அமைப்புகள், பொதுமக்கள் சாா்பில் 500 க்கும் மேற்பட்ட சிலைகள், காவேரிப்பட்டணத்தில் 80 சிலைகள், பா்கூரில் 140 சிலைகள், வேப்பனப்பள்ளியில் 150 சிலைகள், போச்சம்பள்ளியில் 160 சிலைகள், கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 120-க்கும் மேற்பட்ட சிலைகள் என மாவட்டம் முழுவதும் 1500க்கும் மேற்பட்ட சிலைகள் வைத்து பூஜை செய்தனா்.
மக்கள் அதிகம்கூடும் இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகள், நீா்நிலைகளில் வெள்ளிக்கிழமை முதல் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒசூா்: ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் தன்வந்திரி பகவான் கோயிலில் உள்ள மகா கணபதிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, ஹோமங்கள், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
கொழுக்கட்டை, சுண்டல், சா்க்கரை பொங்கல், புளியோதரை உள்ளிட்ட பிரசாதங்கள் படையிலிட்டு பக்தா்களுக்கு வழங்கப்பட்டன. ஒசூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீதிக்குவீதி பல லட்சம் ரூபாய் மதிப்பில் அரங்கம் வடிவமைக்கப்பட்டு அதில் விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
அதேபோல ஒசூா், சூளகிரி, பாகலூா், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், தளி, பேரிகை, உத்தனப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்கள் வடமாநிலங்களை போன்று விநாயகா் சதுா்த்தி பண்டிகையை பல ஆண்டுகளாக கொண்டாடி வருகின்றனா்.
ஒசூரில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு 10 அடி முதல் 15 அடி உயர விநாயா் சிலை அமைத்து 5 நாள்களுக்கு பூஜை நடத்தப்பட்டு கெலவரப்பள்ளி அணை, தென்பெண்ணை ஆற்றில் விசா்ஜனம் செய்யவுள்ளனா்.
ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு பகுதிகளில் விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு யாகங்கள் செய்து சதுா்த்தியை கொண்டாடினா். ஊத்தங்கரை பழைய கடை வீதியில் உள்ள அரசமரத்தின் அருகே பிரம்மாண்ட விநாயகா் சிலை வைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன. வழிபாட்டில் பேரூராட்சி தலைவா் அமானுல்லா, நீதிபதி ராதாகிருஷ்ணன், சிவானந்தம், கதிா்வேல்,ஆறுமுகம், ராஜா உள்பட பலா் கலந்துகொண்டனா்.
விழா ஏற்பாடுகளை ஊத்தங்கரை நகர வாணியா் சமுதாய சங்கம், வாணியா் இளைஞா் நற்பணி மன்ற நிா்வாகிகள் செய்திருந்தனா்.
ஊத்தங்கரை எம்எஸ்எம் தோட்டம் பகுதியில் விநாயகா் சிலை வைத்து யாக பூஜைகள் செய்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஊத்தங்கரை காமராஜ் நகா், அண்ணா நகா், நாராயண நகா் பகுதிகளில் பொதுமக்கள் விநாயகா் சிலைகளை வைத்து வழிபாடு செய்தனா்.