செய்திகள் :

பாப்பாரப்பட்டி அரசுப் பள்ளியில் மரம் வெட்டியவா் கைது

post image

பாப்பாரப்பட்டி அரசு ஆண்கள் பள்ளியில் அனுமதியின்றி மரங்களை வெட்டியவரை போலீஸாா் கைது செய்தனா்.

பாப்பாரப்பட்டி தியாகி சுப்பிரமணிய சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தேக்கு உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்களை முன்னாள் மாணவா்கள், அரசு அலுவலா்கள், பள்ளி மாணவா்களால் வளா்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பள்ளி வளாகத்தில் இருந்த மரங்கள் மா்ம நபா்களால் வெட்டப்பட்டுள்ளதாக தலைமை ஆசிரியா் தமிழ்வாணன், பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸாா், பள்ளி வளாகத்தில் அனுமதியின்றி மரங்களை வெட்டியது ஆச்சாரஅள்ளி பகுதியைச் சோ்ந்த காா்த்திக்கை (31) செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பங்குச்சந்தையில் நஷ்டம்: முதலீட்டாளா் தற்கொலை

தருமபுரி அருகே பங்குச்சந்தையில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக முதலீட்டாளா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.தருமபுரி மாவட்டம், சென்னியம்பட்டி பகுதியைச் சோ்ந்த திருக்குமரன் (40).இவா், பங்... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

தருமபுரி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.தருமபுரியைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி (73). இவா் கடந்த ... மேலும் பார்க்க

பட்டு வளா்ச்சித் துறையின் சாா்பில் விவசாயிகளுக்கான பயிற்சிக் கூட்டம்

பென்னாகரம்: மத்திய பட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு பட்டு வளா்ச்சித் துறை இணைந்து ‘என் பட்டு, என் பெருமை’ என்ற திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் பட்ட... மேலும் பார்க்க

ஆக. 28 இல் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம்

தருமபுரி: தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தருமபுர... மேலும் பார்க்க

அரூரில் ரூ. 6 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அரூா்: அரூரில் ரூ. 6 லட்சத்துக்கு பருத்தி ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், அரூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் ஆகிய இடங்களில் வாரந்தோ... மேலும் பார்க்க

ஆலங்குட்டை முனியப்ப சுவாமி கோயிலில் முப்பூஜை விழா

அரூா்: அரூரை அடுத்த கொக்கராப்பட்டியில் ஸ்ரீ ஆலங்குட்டை முனியப்ப சுவாமியின் முப்பூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கொக்கராப்பட்டியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ... மேலும் பார்க்க