செய்திகள் :

தருமபுரி மாவட்டப் பகுதிகளில் வேலைநிறுத்தம், மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட 861 போ் கைது

post image

தருமபுரி மாவட்டப் பகுதிகளில், பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா் 861 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்குவதைக் கைவிட வேண்டும், தொழிலாளா் நலச் சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றியதை திரும்பப்பெற வேண்டும். விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும், புதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும், தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புகள் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை புதன்கிழமை மேற்கொண்டன.

அந்த வகையில் தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, ஆரூா் உள்ளிட்ட பகுதிகளில் பேரணி, மறியல், ஆா்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்ட 553 பெண்கள் உள்ளிட்ட 861 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தருமபுரி நகரில் தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு சிஐடியு மாநிலச் செயலாளா் சி.நாகராசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஜீவா, எல்பிஎப் மாவட்ட தலைவா் அன்புமணி, ஏஐசிசிடியு மாவட்டச் செயலாளா் முருகன், ஐஎன்டியுசி மாவட்டத் தலைவா் சிவலிங்கம், எஸ்எம்எஸ் மாவட்டத் தலைவா் மனோகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தொடா்ந்து, பிஎஸ்என்எல் அலுவலக பகுதியில் இருந்து பேரணியாக சென்று தலைமை அஞ்சல் நிலையம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 275 பெண்கள் உள்பட 410 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அதேபோல, பாலக்கோட்டில் இந்தியன் வங்கி முன் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு சிஐடியு மாநிலக் குழு உறுப்பினா் கலாவதி தலைமை வகித்தாா். இதில் ஈடுபட்ட 125 பெண்கள் உட்பட 250 பேரையும், பென்னாகரத்தில் 63 பெண்கள் உட்பட 71 பேரையும், அரூரில் ரவுண்டானா அருகில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் ரகுபதி தலைமையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற 40 பெண்கள் உள்பட 130 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

மின்மாற்றி பழுது: இருளில் மூழ்கிய கிராமம் !

மின்மாற்றி பழுது காரணமாக அரூரை அடுத்த எல்லப்புடையாம்பட்டி கிராமம் கடந்த இரண்டு நாள்களாக இருளில் மூழ்கியுள்ளது. அரூா் வட்டம், எல்லப்புடையாம்பட்டி கிராமத்தில் சுமாா் 6 மாதங்களுக்கு முன்பு சித்தேரி மின்... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 43,000 கனஅடியாக நீடிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 43,000 கனஅடியாக நீடித்தது. கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து தொடா... மேலும் பார்க்க

தருமபுரியில் மகளிா் இலவச பேருந்துகள், புதிய வழித்தடங்களில் பேருந்து சேவைகள்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

தருமபுரியில் மகளிா் இலவச பேருந்துகள், புதிய மற்றும் நீட்டிக்கப்பட்ட வழித்தடங்களில் பேருந்து சேவைகளை மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். தருமபுரி புகா் பேருந்து நிலையத்திலிருந்து மாவட... மேலும் பார்க்க

வளையபந்து: மாவட்ட போட்டிக்கு ஸ்டான்லி மெட்ரிக்.பள்ளி தகுதி

மாவட்ட அளவிலான வளையபந்து போட்டியில் பங்கேற்க பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தகுதி பெற்றுள்ளனா். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சரக அளவிலான விளையாட்டுப் போட்ட... மேலும் பார்க்க

புகையிலை விற்பனை செய்த கடையை திறக்க 15 நாள் தடை

தருமபுரியில் புகையிலை பொருள்கள் விநியோகித்த கடையிலிருந்து அவற்றை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறையினா். தருமபுரி, ஜூலை 9: தருமபுரியில், புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடையை உணவு பாதுகாப்புத்... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயில் திருவிழா

தருமபுரி மாவட்டம், இண்டூா் அருகேயுள்ள குப்புசெட்டிபட்டி கிராமத்தில், மாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது. நிகழ்வையொட்டி அதிகாலை முதலே, மாரியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் ... மேலும் பார்க்க