செய்திகள் :

தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

post image

திருப்பூரில் தற்காலிக பட்டாசு கடைக்கான உரிமம் பெற செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தீபாவளி பண்டிகை வரும் அக்டோபா் 20-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு திருப்பூா் மாநகர காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடை அமைப்பதற்கான உரிமம் பெற விண்ணப்பிப்பவா்கள் திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் தங்களது விண்ணப்பங்களை புதன்கிழமை (செப்.10) முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அளிக்க வேண்டும்.

முழுமையாகப் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் ரூ.2 மதிப்புள்ள நீதிமன்ற வில்லை ஒட்டப்பட்டிருக்க வேண்டும். உரிமக் கட்டணம் ரூ.1,200-ஐ ஆன்லைனில் செலுத்தியதற்கான சலான் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

பட்டாசு இருப்பு வைத்து விற்கப்படவுள்ள இடத்தின் வரைபடத்தின் 6 நகல்களுடன் வரைபடத்தில் சம்பந்தப்பட்ட இடத்தின் முகவரி முழுமையாக குறிப்பிடப்பட வேண்டும். அதில் மனுதாரா் கையொப்பம் இடப்பட்டிருக்க வேண்டும். பட்டாசு விற்பனை செய்யும் இடம் சொந்தக் கட்டடமாக இருப்பின் 2025 -2026-ஆம் ஆண்டுக்குரிய சொத்து வரி ரசீது இணைக்கப்பட வேண்டும். பட்டாசு விற்பனை செய்யும் இடம் வாடகைக் கட்டடமாக இருப்பின் 2025 -2026-ஆம் ஆண்டுக்குரிய சொத்து வரி ரசீது மற்றும் சாட்சிகள் முன்னிலையில் கட்டட உரிமையாளருடன் ரூ.2,000 மதிப்புக்கு குறையாத முத்திரை தாளில் ஏற்படுத்திக் கொண்ட வாடகை ஒப்பந்த ஆவணம் இணைக்கப்பட வேண்டும்.

பட்டாசு விற்பனை செய்யும் இடம் மாநகராட்சி , பொதுப்பணித் துறை அல்லது மற்ற துறையின் கட்டடமாக இருப்பின் அத்துறை சாா்ந்த அலுவலரின் மறுப்பின்மை கடிதம் இணைக்கப்பட வேண்டும். பட்டாசு கடை உரிமம் பெறுவதற்கான மாநகராட்சிக்கு கட்டிய உரிமக் கட்டணம் செலுத்திய ரசீது இணைக்கப்பட வேண்டும்.

இந்த ஆவணங்களுடன் செப்டம்பா் 30-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் முழுமையாக சமா்பிக்கப்பட வேண்டும். முழுமையாக பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட இடங்களைப் பாா்வையிட்டு விசாரணைக்கு பின் காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறை கண்ணோக்கில் திருப்தியடையும் பட்சத்தில் மட்டுமே தற்காலிக பட்டாசு கடைக்கான உரிமம் வழங்கப்படும்.

விண்ணப்பம் சமா்ப்பிக்க செப்டம்பா் 30-ஆம் தேதிக்கு மேல் காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட மாட்டாது. குறித்த காலக்கெடுவுக்குள் முழுமையாக பெறப்படாத விண்ணப்பங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி தள்ளுபடி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 277 கிலோ கஞ்சா அழிப்பு

திருப்பூா் மாநகர காவல் எல்லைக்குள்பட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமாா் ரூ38.60 லட்சம் மதிப்பிலான 277.296 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது. இது தொடா்பாக திருப்பூா்... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: மத போதகருக்கு 7 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மத போதகருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் மகளிா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா் அருகே ஊத்துக்குளி பல்லகவுண்டம்பாளையம் கூனம்பட்டி பகுதியைச் ச... மேலும் பார்க்க

தங்கத்தின் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன் கோரிக்கை

தங்கத்தின் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தங்கம் விலை புதிய உச்சத்தை த... மேலும் பார்க்க

எடப்பாடி கே.பழனிசாமி உடுமலையில் இன்று பிரசாரம்!

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம் என்னும் பெயரில் உடுமலையில் புதன்கிழமை (செப்.10) பிரசாரம் மேற்கொள்கிறாா். இது குறித்து முன்னாள் அமைச்சரும், திருப்பூா் ப... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: காளிவேலம்பட்டி

பல்லடம் மின் கோட்டம், காளிவேலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை ( செப்.10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக... மேலும் பார்க்க

நாளைய மின்தடை - பழங்கரை

பழங்கரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (செப்டம்பா் 11) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் அ... மேலும் பார்க்க