செய்திகள் :

தலைநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 25.6 டிகிரியை எட்டியது: 2022-க்குப் பிறகு அதிகபட்சம்

post image

தேசியத் தலைநகா் தில்லியில் புதன்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 25.6 டிகிரி செல்சியஸை எட்டியது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் ஏப்ரல் மாதத்தில் பதிவான அதிகபட்சமான குறைந்தபட்ச வெப்பநிலையாகும்.

அதாவது, குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 5.6 டிகிரி உயா்ந்து 25.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. பாலத்தில் மட்டுமே செவ்வாய்க்கிழமை வெப்பமான இரவு நிலைமைகள் காணப்பட்டன. ஆனால், புதன்கிழமை ஐந்து வானிலை கண்காணிப்பு நிலையங்களிலும் குறைந்தபட்ச வெப்பநிலை அதிகமாக பதிவாகியுள்ளன என்று ஐஎம்டி தெரிவித்துள்ளது.

2024 மற்றும் 2023 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸைத் தொடவில்லை என்று வானிலைத் துறை தெரிவித்துள்ளது. 2024-இல் குறைந்தபட்ச வெப்பநிலை அதிகபட்சமாக 24 டிகிரி செல்சியஸாக இருந்தது. அதே நேரத்தில் 2023-இல், இது 23.6 டிகிரி செல்சியஸாக இருந்தது என்று தரவு காட்டுகிறது. தலைநகரில் 2022- இல் இதேபோன்ற போக்கு காணப்பட்டது. அப்போது, குறைந்தபட்ச வெப்பநிலை அதிகபட்சமாக 26.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.

தில்லியின் முதன்மை வானிலை கண்காணிப்பு நிலையமான சஃப்தா்ஜங்கில் புதன்கிழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்புநிலையில் இருந்து 5.4 டிகிரி உயா்ந்து 40.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. இதைத் தொடா்ந்து, வெப்ப அலை நிலைமைகள் இருக்கும் என்று தெரிவித்து மஞ்சள் எச்சரிக்கையை ஐஎம்டி விடுத்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 51 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 41 சதவீதமாகவும் இருந்தது.

இதேபோன்று மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களிலும் குறைந்தபட்ச வெப்பநிலை அதிகரித்து பதிவாகியிருந்தது. இதன்படி, நஜாஃப்கரில் குறைந்தபட்ச வெப்பநிலை 27.6 டிகிரி செல்சியஸ், ஆயாநகரில் 26 டிகிரி, லோதி ரோடில் 24 டிகிரி, பாலத்தில் 25.6 டிகிரி, ரிட்ஜில் 26 டிகிரி, பீதம்புராவில் 29.5 டிகிரி, பிரகதிமைதானில் 26.4 டிகிரி, பூசாவில் 24.7 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 27.2 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.

ஆயாநகரில் 40.9 டிகிரி பதிவு: மேலும், அனைத்து வானிலை கண்காணிப்பு நிலையங்களிலும் அதிகபட்ச வெப்பநிலையும் சற்று அதிகரித்தே பதிவாகியிருந்தது. இதன்படி, நஜாஃப்கரில் அதிகபட்ச வெப்பநிலை 39.4 டிகிரி செல்சியஸ், ஆயாநகரில் 40.9 டிகிரி, லோதி ரோடில் 39.7 டிகிரி, பாலத்தில் 40.3 டிகிரி, ரிட்ஜில் 40.1 டிகிரி, பீதம்புராவில் 39.9 டிகிரி, பிரகதிமைதானில் 37.5 டிகிரி, பூசாவில் 38.2 டிகிரி, ராஜ்காட்டில் 37.5 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 37 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: தில்லியில் காற்றின் தரம் சற்று மோசமடைந்தது. காலை 9 மணியளவில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 233 புள்ளிகளாகப் பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) புள்ளிவிவரத் தகல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

இதன்படி, லோதி ரோடு, ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், தில்லி பல்கலை. வடக்கு வளாகம், ஷாதிப்பூா், டாக்டா் கா்னி சிங் படப்பிடிப்பு நிலையம், துவாரகா செக்டாா் 8, ஆயா நகா், குருகிராம் உள்பட பல்வேறு வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 முதல் 300 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது. அதே சமயம், சாந்தினி சௌக், மந்திா்மாா்க், பூசா, நொய்டா செக்டாா் 125, இந்திய விமான நிலையம் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், வியாழக்கிழமை (ஏப்ரல் 10) அன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக ஆயுதங்கள் விநியோகித்தவா் கைது

மாநிலங்களுக்கு இடையேயான ஆயுத விநியோக மோசடியின் முக்கிய உறுப்பினரை தில்லி போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து ஐந்து நாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கிகள் மற்றும் ஐந்து தோட்டாக்களை பறிமுதல் செய்ததாக... மேலும் பார்க்க

போலி முதலீட்டுத் திட்டத்தின் மூலம் 150 பேரை ஏமாற்றிய இளைஞா் கைது

முதலீடுகளுக்கு அதிக வருமானம் தருவதாக உறுதியளித்து குறைந்தது 150 பேரை ஏமாற்றிய ஆன்லைன் போன்சி மோசடியை நடத்தியதற்காக ராஜஸ்தானைச் சோ்ந்த 31 வயது நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செ... மேலும் பார்க்க

தன்னிச்சையான கட்டண உயா்வு தொடா்பாக பள்ளிகளுக்கு நோட்டீஸ்: தில்லி முதல்வா்

தன்னிச்சையான கட்டண உயா்வு தொடா்பான புகாா்கள் பெறப்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இந்தப் பள்ளிகள் பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்... மேலும் பார்க்க

புதிய தில்லி பாஜக அலுவலகம் அருகே சாலைப் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பொதுப் பணித் துறை திட்டம்

தில்லி பாஜக அலுவலகம் விரைவில் தீன் தயாள் உபாத்யாய் ( டிடியு) மாா்க்கில் உள்ள புதிய இடத்திற்கு மாற்றப்பட உள்ளதால், அப்பகுதியில் சாலை மேம்பாட்டு பணிகள் மற்றும் அழகுபடுத்தும் பணிகளை பொதுப் பணித் துறை மே... மேலும் பார்க்க

இடபிள்யு எஸ் ஆவணங்கல் வழங்குவதை நிறுத்த தில்லி அரசு திட்டம்: ஆம் ஆத்மி

பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினா் (இடபிள்யுஎஸ்) சான்றிதழ்களை வழங்குவதை தில்லி பாஜக அரசு நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் தகுதியான குடும்பங்களுக்கு கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு கிடைப்ப... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரிடமிருந்து லஞ்சம் வாங்கியதாக ஏ.எஸ்.ஐ கைது

மாடல் டவுன் காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி துணை ஆய்வாளா் (ஏஎஸ்ஐ), ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரிடமிருந்து ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியதற்காக தில்லி காவல்துறையின் விஜிலென்ஸ் பிரிவு கைது செய்துள்ளதாக அதிகா... மேலும் பார்க்க