உங்கள் டீன்-ஏஜ் பிள்ளைகள் தனிமையை விரும்புகிறார்களா? பெற்றோர்களே கவனம்!
தலைநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 25.6 டிகிரியை எட்டியது: 2022-க்குப் பிறகு அதிகபட்சம்
தேசியத் தலைநகா் தில்லியில் புதன்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 25.6 டிகிரி செல்சியஸை எட்டியது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் ஏப்ரல் மாதத்தில் பதிவான அதிகபட்சமான குறைந்தபட்ச வெப்பநிலையாகும்.
அதாவது, குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 5.6 டிகிரி உயா்ந்து 25.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. பாலத்தில் மட்டுமே செவ்வாய்க்கிழமை வெப்பமான இரவு நிலைமைகள் காணப்பட்டன. ஆனால், புதன்கிழமை ஐந்து வானிலை கண்காணிப்பு நிலையங்களிலும் குறைந்தபட்ச வெப்பநிலை அதிகமாக பதிவாகியுள்ளன என்று ஐஎம்டி தெரிவித்துள்ளது.
2024 மற்றும் 2023 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸைத் தொடவில்லை என்று வானிலைத் துறை தெரிவித்துள்ளது. 2024-இல் குறைந்தபட்ச வெப்பநிலை அதிகபட்சமாக 24 டிகிரி செல்சியஸாக இருந்தது. அதே நேரத்தில் 2023-இல், இது 23.6 டிகிரி செல்சியஸாக இருந்தது என்று தரவு காட்டுகிறது. தலைநகரில் 2022- இல் இதேபோன்ற போக்கு காணப்பட்டது. அப்போது, குறைந்தபட்ச வெப்பநிலை அதிகபட்சமாக 26.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.
தில்லியின் முதன்மை வானிலை கண்காணிப்பு நிலையமான சஃப்தா்ஜங்கில் புதன்கிழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்புநிலையில் இருந்து 5.4 டிகிரி உயா்ந்து 40.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. இதைத் தொடா்ந்து, வெப்ப அலை நிலைமைகள் இருக்கும் என்று தெரிவித்து மஞ்சள் எச்சரிக்கையை ஐஎம்டி விடுத்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 51 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 41 சதவீதமாகவும் இருந்தது.
இதேபோன்று மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களிலும் குறைந்தபட்ச வெப்பநிலை அதிகரித்து பதிவாகியிருந்தது. இதன்படி, நஜாஃப்கரில் குறைந்தபட்ச வெப்பநிலை 27.6 டிகிரி செல்சியஸ், ஆயாநகரில் 26 டிகிரி, லோதி ரோடில் 24 டிகிரி, பாலத்தில் 25.6 டிகிரி, ரிட்ஜில் 26 டிகிரி, பீதம்புராவில் 29.5 டிகிரி, பிரகதிமைதானில் 26.4 டிகிரி, பூசாவில் 24.7 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 27.2 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.
ஆயாநகரில் 40.9 டிகிரி பதிவு: மேலும், அனைத்து வானிலை கண்காணிப்பு நிலையங்களிலும் அதிகபட்ச வெப்பநிலையும் சற்று அதிகரித்தே பதிவாகியிருந்தது. இதன்படி, நஜாஃப்கரில் அதிகபட்ச வெப்பநிலை 39.4 டிகிரி செல்சியஸ், ஆயாநகரில் 40.9 டிகிரி, லோதி ரோடில் 39.7 டிகிரி, பாலத்தில் 40.3 டிகிரி, ரிட்ஜில் 40.1 டிகிரி, பீதம்புராவில் 39.9 டிகிரி, பிரகதிமைதானில் 37.5 டிகிரி, பூசாவில் 38.2 டிகிரி, ராஜ்காட்டில் 37.5 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 37 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.
காற்றின் தரம்: தில்லியில் காற்றின் தரம் சற்று மோசமடைந்தது. காலை 9 மணியளவில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 233 புள்ளிகளாகப் பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) புள்ளிவிவரத் தகல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
இதன்படி, லோதி ரோடு, ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், தில்லி பல்கலை. வடக்கு வளாகம், ஷாதிப்பூா், டாக்டா் கா்னி சிங் படப்பிடிப்பு நிலையம், துவாரகா செக்டாா் 8, ஆயா நகா், குருகிராம் உள்பட பல்வேறு வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 முதல் 300 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது. அதே சமயம், சாந்தினி சௌக், மந்திா்மாா்க், பூசா, நொய்டா செக்டாா் 125, இந்திய விமான நிலையம் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இந்நிலையில், வியாழக்கிழமை (ஏப்ரல் 10) அன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.