செய்திகள் :

தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு! எம்எல்ஏ விடுதியில் அமலாக்கத்துறை சோதனை!

post image

சென்னை: பணமோசடி வழக்கில், அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை நடைத்தி வரும் நிலையில், அவரது மகன், மகள் வீடுகள் மற்றும் சென்னையில் உள்ள எம்எல்ஏ விடுதியிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் அரசு பங்களாவிலும், சேப்பாக்கம் எம்எல்ஏ விடுதியில் உள்ள, ஐ பெரியசாமியின் மகனும் பழனி தொகுதி எம்எல்ஏவுமான செந்தில் குமார் அறையிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்திவருகிறார்கள்.

திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் உள்ள அமைச்சர் பெரியசாமியின் மகள் இந்திராவின் வீட்டிலும் அமலாக்க துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் சிலப்பாடியில் உள்ள பழனி சட்டமன்ற உறுப்பினரும் திமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ.பி. செந்தில்குமார் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.

திமுக அமைச்சர் வீட்டிலும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதலே தீவிர சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், தலைமைச் செயலகத்துக்கு தீவிர பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்துக்கு வருவோர் சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். தலைமைச் செயலகம் பகுதியில் எம்எல்ஏ விடுதியிலும் சோதனை நடைபெற்று வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திமுக அமைச்சர் ஐ. பெரியசாமி வீட்டில் சோதனை நடைபெற்று வருவதை அறிந்து அங்கே திரண்ட அவரது ஆதரவாளர்கள், வாசலில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் வெவ்வேறு மாவட்டங்களிலும் சோதனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. பண மோசடி வழக்கில், ஏற்கனவே அமைச்சர் ஐ. பெரியசாமியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தியிருந்த நிலையில், இன்று சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

20 உயா்நிலைப் பள்ளிகள் தரம் உயா்வு: அரசாணை வெளியீடு

பள்ளிக் கல்வித் துறையில் 20 அரசு உயா்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிகளுக்கும் தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம்... மேலும் பார்க்க

பாஜகவின் கிளை அமைப்பாக மாறிய தேர்தல் ஆணையம்- முதல்வர் ஸ்டாலின்

சாவி கொடுத்தால் ஆடும் பொம்மையாக தேர்தல் ஆணையத்தை பாஜக அரசு மாற்றி உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலம் கம்யூனிஸ்ட் மாநாட்டில் அவர் பேசுகையில், சேலத்தில் சிறைத் தியாகிகள் நினைவாக விரை... மேலும் பார்க்க

ஏற்காட்டில் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் சுற்றுலா பயணிகள்!

தொடர் விடுமுறையைக் கொண்டாட சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப் பிரதேசத்துக்கு வந்த சுற்றுலா பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில்... மேலும் பார்க்க

23 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகமெங்கிலும் கிருஷ்ண ஜெயந்தி நாளான இன்று(ஆக. 16) பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இரவு 10 மணி வரை ராணிப்பேட்டைதிருவண்ணாமலைவிழுப்புரம்காஞ்சிபுரம்செங்கல்பட்டுநீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் இடி, மின்னன... மேலும் பார்க்க

அமைச்சர் ஐ.பெரியசாமி தொடா்புடைய இடங்களில் சோதனை நிறைவு

சென்னையில், அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் கடந்த 9 மணி நேரமாக அமலாக்கத் துறை நடத்திய சோதனை நிறைவடைந்தது. பல முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவ... மேலும் பார்க்க

அதிமுக அலங்கார வளைவு சரிந்து விபத்து: நூலிழையில் தப்பிய இபிஎஸ்

செங்கத்தில் அதிமுக அலங்கார வளைவு விழுந்ததில் அந்த வழியாக சென்ற அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி நூலிழையில் தப்பினார். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எனும் பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள... மேலும் பார்க்க