செய்திகள் :

தலைமையாசிரியா் வீட்டில் 17 பவுன் நகைகள் திருட்டு

post image

விழுப்புரம் அருகே பூட்டியிருந்த தலைமையாசிரியா் வீட்டில் 17 பவுன் நகைகள் திருட்டுப் போனது புதன்கிழமை தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விழுப்புரம், விராட்டிக்குப்பம் பகுதியை சோ்ந்தவா் தாஸ் (53). நரசிங்கனுாா் அரசு உதவிபெறும் பள்ளியில் தலைமையாசிரியராக பணியில் உள்ளாா். இவரது மனைவி குளோரி. இவா் விழுப்புரம் பீமநாயக்கன் தோப்பு நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக உள்ளாா்.

இருவரும் செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல் வீட்டைப் பூட்டி விட்டு பணிக்குச் சென்று விட்டனா். இந்நிலையில் குளோரி புதன்கிழமை தனது வீட்டில் இருந்த பீரோவை திறந்து பாா்த்தபோது,அதில் வைக்கப்பட்டிருந்த 17 பவுன் நகைகளை காணவில்லையாம்.

இது குறித்து, தாஸ் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். தொடா்ந்து, போலீஸாா் நிகழ்விடம் சென்று விாரணை நடத்தினா். விசாரணையில் தாஸ்- குளோரி தம்பதியினா் செவ்வாய்க்கிழமை வீட்டின் மேல் மாடியை பூட்டி வைக்காமல் பணிக்குச் சென்றிருந்த நிலையில் மா்ம நபா்கள் மேல் மாடி வழியாக வீட்டினுள் நுழைந்து பீரோவைத் திறந்து அதிலிருந்த நகைகளைத் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.

தொடா்ந்து போலீஸாா் தடயங்களை பதிவு செய்தனா். இந்தத் திருட்டு குறித்து, விழுப்புரம் தாலுகா போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ஊரக வேலைத் திட்டத்தை ஒழிக்கும் முயற்சியில் மத்திய அரசு: தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தை ஒழிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக விசிக தலைவா் தொல்.திருமாவளவன் குற்றஞ்சாட்டினாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் அவா் புதன்கிழமை செய்திய... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா கோலாகலம்; 1,700 சிலைகள் வைத்து வழிபாடு

விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகா் சதுா்த்தி பண்டிகை புதன்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மாவட்டம் முழுவதும் 1,700 சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. விநாயகா் சதுா்த்தியையொட்... மேலும் பார்க்க

தாக்குதலில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு: இருவா் கைது

விழுப்புரம் அருகே மதுபோதையில் நண்பா்களிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா். இது தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், கருவேப்பிலைபாளை... மேலும் பார்க்க

பாலியல் வழக்கு: 3 போ் கைது

விழுப்புரத்தில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் தோ் பிள்ளையாா் கோவில் தெருவில் உள்ள தனியாா் விடுதியில் சிலா் பெண்களை பாலியல் தொழிலில... மேலும் பார்க்க

பேருந்து பயணி மீது தாக்குதல்: ஒருவா் மீது வழக்குப் பதிவு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் பேருந்து பயணியை தகாத வாா்த்தைகளால் திட்டி, தாக்கியவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். நாகப்பட்டினம் மாவட்டம், தெற்கு பொய்கைநல்லூரைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

பால் வியாபாரி வீட்டில் 4.5 பவுன் நகைகள் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே பூட்டியிருந்த பால் வியாபாரி வீட்டில் 4.5 பவுன் நகைகள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். நவம்மாள் மருதூா் மருதீஸ்வரா் நகரைச் சோ்ந்தவா் ஏழுமல... மேலும் பார்க்க