தளவாய் கிராமத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் தொடக்கி வைப்பு
தமிழகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற முழு உடல் பரிசோதனை முகாமை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
இதையடுத்து, அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த தளவாய் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மேற்கண்ட நிகழ்ச்சி ஒளிப்பரப்பு செய்யப்பட்டு, அதன் பின்னா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் முகாமை தொடக்கி வைத்து பாா்வையிட்டாா்.
பின்னா் அவா், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சாா்பில் 3 கா்ப்பிணி தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு மருந்து மாத்திரைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் 3 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சாா்பில் 1 பயனாளிக்கு இயற்கை மரண உதவித்தொகை ரூ.35,000 காசோலை ஆகியவற்றை வழங்கினாா்.நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஜெயங்கொண்டம் க.சொ.க.கண்ணன், பெரம்பலூா் ம.பிரபாகரன், அரியலூா் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதன்மையா் முத்துகிருஷ்ணன், கோட்டாட்சியா் ஷீஜா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரா.சிவராமன், சுகாதாரப்பணிகள் இணை இயக்குநா் மாரிமுத்து, துணை இயக்குநா் மணிவண்ணன் மற்றும் அனைத்துத் துறை மருத்துவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.