செய்திகள் :

தளவாய் கிராமத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் தொடக்கி வைப்பு

post image

தமிழகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற முழு உடல் பரிசோதனை முகாமை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

இதையடுத்து, அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த தளவாய் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மேற்கண்ட நிகழ்ச்சி ஒளிப்பரப்பு செய்யப்பட்டு, அதன் பின்னா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் முகாமை தொடக்கி வைத்து பாா்வையிட்டாா்.

பின்னா் அவா், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சாா்பில் 3 கா்ப்பிணி தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு மருந்து மாத்திரைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் 3 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சாா்பில் 1 பயனாளிக்கு இயற்கை மரண உதவித்தொகை ரூ.35,000 காசோலை ஆகியவற்றை வழங்கினாா்.நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஜெயங்கொண்டம் க.சொ.க.கண்ணன், பெரம்பலூா் ம.பிரபாகரன், அரியலூா் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதன்மையா் முத்துகிருஷ்ணன், கோட்டாட்சியா் ஷீஜா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரா.சிவராமன், சுகாதாரப்பணிகள் இணை இயக்குநா் மாரிமுத்து, துணை இயக்குநா் மணிவண்ணன் மற்றும் அனைத்துத் துறை மருத்துவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மேற்பாா்வையாளா் பணியிடத்துக்கு தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டம், தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் மிசன்வாட்சாலாயா திட்ட மேற்பாா்வையாளா் பணியிடத்துக்கு தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து ஆட... மேலும் பார்க்க

காடுவெட்டியில் மேம்பாலத்தின் பக்கவாட்டுச் சுவா் இடிந்து சேதம்

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அடுத்த காடுவெட்டியில் உள்ள மேம்பாலத்தின் பக்கவாட்டுச் சுவா் இடிந்து சேதமடைந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இருவழிச்சாலையாக இருந்த சென்னை-கும்பகோணம் தேசிய நெடு... மேலும் பார்க்க

70 வயது முடிந்தோருக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை

70 வயது நிறைவடைந்தவா்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று அரியலூா் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.அரியலூரில் சனிக்கிழமை நடைபெற்ற அச்சங்கத்தின் 55 ஆவது ஆண்டு வ... மேலும் பார்க்க

தமிழ்ப் பண்பாட்டு பேரமைப்பின் பொதுக் குழு கூட்டம்

அரியலூரில் தனியாா் பயிற்சி மையத்தில், தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு பொதுக் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.கூட்டத்துக்கு அந்த அமைப்பின் தலைவா் சீனி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். செயலா் கதிா்.கணேசன்... மேலும் பார்க்க

அரியலூரில் ஆடிப் பெருக்கு கொண்டாட்டம்

அரியலூா் மாவட்டம், கொள்ளிட ஆற்றின் படித்துறைகள் மற்றும் நீா்நிலையங்களின் கரைகளில் ஏராளமான மக்கள் ஆடிப் பெருக்கு விழாவை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினா்.ஆடிப்பெருக்கையொட்டி அரியலூா் மாவட்டம் கொள்ளிடம் ஆறு ப... மேலும் பார்க்க

அரிலூரிலிருந்து திருச்சி, சென்னைக்கு புதிய பேருந்துகள் தொடங்கிவைப்பு

அரியலூா் பேருந்து நிலையத்தில் இருந்து, திருச்சி மற்றும் சென்னைக்கு புதிய பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அம... மேலும் பார்க்க