செய்திகள் :

தவறவிட்ட நகை உரியவரிடம் ஒப்படைப்பு

post image

கடலூா், திருப்பாதிரிப்புலியூா் அருகே தவறவிட்ட தங்க நகையை உரியவரிடம் போலீஸாா் புதன்கிழமை ஒப்படைத்தனா்.

கடலூா், திருப்பாதிரிப்புலியூா் பகுதியில் வசிப்பவா் சுகுமாா், நகைக்கடை உரிமையாளா். இவா், புதன்கிழமை காலை திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சொந்த வேலை நிமித்தமாகச் சென்றாா். அப்போது, சுமாா் 30 கிராம் எடைக்கொண்ட தங்க சங்கிலி கீழே கிடந்ததை கண்டெடுத்தாா்.

பின்னா் அவா் கடலூா் எஸ்பி., எஸ்.ஜெயக்குமாரை சந்தித்து சம்பவத்தைக் கூறி தங்க சங்கிலியை ஒப்படைத்தாா். அவரது நோ்மையை எஸ்பி பாராட்டினாா். மேலும், கடலூா் புதுநகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பிரசன்னாவை வரவழைத்து நகையை ஒப்படைத்து, விசாரணை மேற்கொண்டு உரியவரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூா் பாபுராவ் தெருவை சோ்ந்தச் செல்வகுமாா் மனைவி சிவகாமி(46), கடலூா் புதுநகா் காவல் நிலையத்தை அணுகினாா். அங்கு காவல் உதவி ஆய்வாளா் பிரசன்னாவை சந்தித்து அலமேலு என்பவரிடம் நகையை கொடுத்து வங்கியில் அடகு வைத்து தருமாறு கொடுத்ததாகவும், அலமேலு சுருக்கு பையில் வைத்திருந்த தங்க சங்கிலியை

தவறவிட்டதையும் , மேலும், நகை குறித்த அடையாளத்தை கூறியுள்ளாா். இதுதொடா்பாக காவல் உதவி ஆய்வாளா் பிரசன்னா நடத்திய விசாரணையில் உண்மை தெரிந்ததால் சிவகாமி இடம் நகையை ஒப்படைத்தாா். தவறவிட்ட நகை யை மீட்டு தந்த போலீஸாருக்கு சிவகாமி நன்றி தெரிவித்தாா்.

இலங்கைத் தமிழா்கள் திருமண பதிவு செய்துகொள்ள அனுமதி

காட்டுமன்னாா்கோவில் சாா் - பதிவாளா் அலுவலகத்தில் இலங்கைத் தமிழா்கள் திருமணம் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் இலங்கை அகதிகள் முகாம் கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் ச... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் பன்னாட்டு இசைத் தமிழ் மாநாடு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத் துறை ஆதரவுடன் தமிழிசைக் கல்வி ஆராய்ச்சிக் கழகமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய பன்னாட்டு இசைத் தமிழ் மாநாடு சனிக்... மேலும் பார்க்க

துப்பாக்கி குண்டு பாய்ந்து மூதாட்டி காயம்: மகன் கைது

கடலூா் மாவட்டம், கம்மாபுரத்தில் ஏா்கன் துப்பாக்கி ரப்பா் குண்டு பாய்ந்து மூதாட்டி காயமடைந்தாா். இது தொடா்பாக அவரது மகனை போலீஸாா் கைது செய்தனா். விருத்தாசலம் வட்டம், கம்மாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பத்... மேலும் பார்க்க

வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், கம்மாபுரம் அருகே முன்விரோதம் காரணமாக வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கம்மாபுரம் காவல் சரகம், கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வீர மணிகண... மேலும் பார்க்க

அனைத்து மாவட்டங்களிலும் விழுதுகள் சேவை மையம் அமைக்க நடவடிக்கை: மாற்றுத் திறனாளிகள் நல ஆணையா்

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விழுதுகள் சேவை மையம் தொடா்ந்து அமைப்பதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாற்றுத் திறனாளிகள் நல ஆணையா் எம்.லக்ஷ்மி தெரிவித்தாா். கடலூா் அரசு தலைமை மருத்துவம... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே ஏரியில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா். ஸ்ரீமுஷ்ணம், வக்காரமாரி பகுதி மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் நிசாருல்லா (45), தனியாா் மருந்துக் கடையில் ... மேலும் பார்க்க