செய்திகள் :

தவெக கேட்டதைவிட பெரிய இடமே கொடுக்கப்பட்டது! டிஜிபி விளக்கம்

post image

தமிழக வெற்றிக் கழகத்தினர் கூட்டம் நடத்துவதற்காக கேட்கப்பட்ட இரண்டு இடங்களைவிடவும் பெரிய இடம்தான் கொடுக்கப்பட்டது என்று தமிழக காவல்துறை தலைவர் (பொறுப்பு) வெங்கடராமன் தெரிவித்துள்ளார்.

கரூரில் தவெக விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 10 குழந்தைகள் உள்பட 39 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பொறுப்பு டிஜிபி விளக்கம் அளித்துள்ளார்.

அவர் பேசியதாவது:

”தமிழக வெற்றிக் கழகத்தினர் கோரிய லைட் ஹவுஸ் ரவுண்டானா மற்றும் உழவர் சந்தை ஆகிய இடங்கள் குறுகலாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு, அதனைவிட பெரிய இடத்திலேயே காவல்துறையினர் அனுமதி வழங்கினர். தவெகவினரும் அதற்கு ஒப்புக் கொண்டனர்.

பிற்பகல் 3 மணிமுதல் இரவு 10 மணிவரை அனுமதி கேட்டு கடிதம் வழங்கப்பட்டது. ஆனால், தவெக சமூக ஊடக பக்கங்களில் பகல் 12 மணி என அறிவிக்கப்பட்டதால், காலை 11 மணி முதலே கூட்டம் கூட ஆரம்பித்தது.

விஜய், இரவு 7 மணிக்கு பிரசாரப் பகுதிக்கு வந்தடைந்தார். எல்லையிலேயே வரவேற்பு அளித்த தொண்டர்கள் வாகனத்துடன் பின்தொடர்ந்ததால் கூட்டம் அதிகரித்தது. கூட்டம் தொடங்கும்போதே காவல்துறைக்கு விஜய் நன்றி தெரிவித்தார்.

10,000 பேர் வருவார்கள் என்று கூறப்பட்டதால், 500 காவல்துறையினர் பாதுகாப்புப் பணிக்கு போடப்பட்டனர். ஆனால், 27,000 பேர் கூடினர்.” எனத் தெரிவித்தார்.

Tamil Nadu DGP's explanation regarding the Karur incident...

இதையும் படிக்க : கரூர் பலி: 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு!

கரூரில் முதல்வர் ஸ்டாலின்! பலியானோருக்கு அஞ்சலி!

கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகை தந்துள்ளார்.கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 8 குழந... மேலும் பார்க்க

தமிழகத்தை அதிகம் கடன் வாங்கும் மாநிலமாக்கியவா் மு.க.ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழகத்தை அதிகம் கடன் வாங்கும் மாநிலமாக மாற்றியவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின்... மேலும் பார்க்க

தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மேற்கு திசை காற்றின் வேக... மேலும் பார்க்க

வக்ஃப் வாரியம் திருத்தி அமைக்கப்படாது: தமிழக அரசு

உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீா்ப்பு வரும் வரை, மத்திய அரசின் புதிய வக்ஃப் திருத்தச் சட்டப்படி, வக்ஃப் வாரியம் திருத்தி அமைக்கப்பட மாட்டாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சிறுபான்மையினா... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி

உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து அந்தக் கட்சி சாா்பில் சனிக்கி... மேலும் பார்க்க

முதல்வருடன் காங்கிரஸ் எம்.பி.க்கள் சந்திப்பு: பேரவைத் தோ்தல் குறித்து ஆலோசனை

தமிழகத்தைச் சோ்ந்த காங்கிரஸ் எம்.பி.க்களுடன் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா். காங்கிரஸ் கட்சி மக்களவை உறுப்பினா்கள் விஜய் வசந்த் (கன்னியாகுமரி), விஷ்ணு பிரசாத் (கடலூா்), ஜ... மேலும் பார்க்க