செய்திகள் :

தஹாவூா் ராணாவிடம் மும்பை காவல் துறை 8 மணி நேரம் விசாரணை

post image

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூா் ராணாவிடம் மும்பை காவல் துறையின் குற்றப் பிரிவு 8 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது.

கடந்த 2008-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 170-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கம் நடத்திய இந்தத் தாக்குதலில், பாகிஸ்தானை பூா்விகமாக கொண்ட தஹாவூா் ராணா கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

லஷ்கா்-ஏ-தொய்பா இயக்கத்துக்கு அவா் உதவியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் அவா் குற்றவாளி என்று அமெரிக்க நீதிமன்றம் தீா்ப்பளித்ததால், அந்நாட்டின் லாஸ் ஏஞ்சலீஸ் சிறையில் அவா் அடைக்கப்பட்டிருந்தாா். இந்த மாத தொடக்கத்தில் அவா் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டாா்.

தில்லியில் தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) காவலில் உள்ள அவரிடம், கடந்த புதன்கிழமை மும்பை காவல் துறையின் குற்றப் பிரிவு அதிகாரிகள் 8 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனா். அவா் கேள்விகளுக்கு சரிவர பதிலளிக்காமல் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.

ஏப். 29, 30 தேதிகளில் ரே பரேலி, அமேதி செல்லும் ராகுல்!

மக்களவைத் தேர்தலுக்கு பிறகு முதல்முறையாக அமேதி தொகுதிக்கு ராகுல் காந்தி செல்லவுள்ளார்.மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் முதல்முறையாக உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதிக்கு, ஏப்ரல் 30 ஆம் தேதியில் மக்களவை... மேலும் பார்க்க

பைக் - வேன் மோதல்; 11 பேர் பலி

மத்தியப் பிரதேசத்தில் பைக் மீது வேன் மோதியதுடன், கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் விழுந்ததால் பயணிகள் பலியாகினர்.மத்தியப் பிரதேசம் மாநிலம் மண்ட்சௌர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையில் 13 பயணிகளுடன் செ... மேலும் பார்க்க

மணிப்பூரில் 12 பயங்கரவாதிகள் கைது! ஆயுதங்கள் பறிமுதல்!

மணிப்பூரில் 12 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஆயுதங்களையும் வெடிபொருள்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மணிப்பூரில் ரோந்துப் பணியின்போது மூன்று மாவட்டங்களில் இ... மேலும் பார்க்க

பிரச்னைகளைவிட பிரசாரத்துக்கு முன்னுரிமை அளிக்கும் பாஜக: சமாஜவாதி

பஹல்காம் தாக்குதலுக்கு, பாஜக அரசின் இயலாமைதான் காரணம் என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து, பாஜக அரசின் மீது குற்றம் சாட்டிய சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் ... மேலும் பார்க்க

உ.பி.: கைவிடப்பட்ட காரில் இளைஞர் சடலம், அருகே மது பாட்டிலும் மீட்பு

உத்தரப் பிரதேசத்தில் காரில் இருந்து இளைஞர் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மௌரானிபூர் வட்ட அதிகாரி ராம்வீர் சிங் கூறுகையில், கஜுராஹோ சாலையில் உள்ள பரியாபைர் க... மேலும் பார்க்க

இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்: கனடா நாட்டைச் சேர்ந்தவர் கைது

வாராணசி விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தில் இருந்த பயணி ஒருவர் வெடிகுண்டு வைத்திருந்ததாகக் கூறி பரபரப்பை கிளப்பினார்.உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசி விமான நிலையத்தில் இருந்து வாராணசி-பெங்களூரு இண்டி... மேலும் பார்க்க