செய்திகள் :

தாஜ் மகாலில் குடும்பத்துடன்.. அமெரிக்க துணை அதிபர் பகிர்ந்த புகைப்படத்துக்கு எலான் மஸ்க் கருத்து!

post image

உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ், தனது குடும்பத்தினருடன் பார்த்து மகிழ்ந்தார். அவர் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பதிய, அதற்கு எலான் மஸ்க் கருத்தும் தெரிவித்துள்ளார்.

இன்று நான் எனது மனைவி உஷா மற்றும் பிள்ளைகளுடன் தாஜ்மகாலை பார்வையிட்டேன். மிக அழகான வரலாற்று நினைவுச் சின்னம், நான் பெற்ற அருமையான வரவேற்பால் மகிழ்ச்சியடைகிறேன் என்று தாஜ்மகால் பின்னணியில் இருக்க குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

அதற்கு, எலான் மஸ்க், உலகி அதிசயங்களில் மிகவும் அழகான அதிசயம் என்று கருத்திட்டுள்ளார்.

அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ், இந்தியாவில் 4 நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். திங்கள்கிழமை தலைநகா் தில்லியில் பிரதமா் மோடியை சந்தித்த அவா், இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். பாதுகாப்பு, வா்த்தகம், எரிசக்தி, வியூக தொழில்நுட்பம் உள்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இருவரும் விரிவாக விவாதித்தனா்.

பின்னா், வான்ஸ், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அவரது மனைவி உஷா மற்றும் மூன்று குழந்தைகளுக்கு பிரதமா் இல்லத்தில் இரவு விருந்து அளிக்கப்பட்டது.

தில்லியைத் தொடா்ந்து, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூருக்கு சென்ற அவா்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க அம்பா் கோட்டையை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டனா். பயணத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை, உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை பாா்வையிட்டனா். அங்கிருந்த பார்வையாளர்கள் பதிவேட்டில், உண்மையான அன்பு மற்றும் மனித படைப்பாற்றலின் அடையாளமாக தாஜ்மஹால் திகழ்கிறது; இது, மகத்தான தேசமாகிய இந்தியாவின் பெருமை’ என்று அவா் குறிப்பிட்டாா்.

முன்னதாக, ஆக்ரா விமான நிலையத்தில் வந்திறங்கிய வான்ஸ் மற்றும் குடும்பத்தினரை முதல்வா் யோகி ஆதித்யநாத் நேரில் வரவேற்றாா். பின்னா், காா் மூலம் அவா்கள் தாஜ்மஹாலுக்கு சென்றனா்.

உக்ரைனுக்கு எதிரான போரில் வடகொரிய வீரர்கள்: உறுதி செய்தது ரஷியா!

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு ஆதரவாக வடகொரிய வீரர்கள் ஈடுபட்டதை ரஷிய ராணுவம் உறுதி செய்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு முதல் உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போரானது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில்... மேலும் பார்க்க

ஈரான்: கொள்கலன் ஏற்றுமதி நிலையத்தில் வெடிவிபத்து; 115 பேர் காயம்

ஈரானில் கொள்கலன் ஏற்றுமதி வெடிவிபத்தில் 115 பேர் காயமடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.ஈரானில் உள்ள ராஜேய் ஏற்றுமதி நகரத்தில் கொள்கலன்களை ஏற்றுமதி செய்யும்போது, பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதாகத் தகவல் வ... மேலும் பார்க்க

ஒரே ஒரு மரப்பெட்டி ஏன்? போப்பின் சவப்பெட்டியில் என்னென்ன வைக்கப்படும்?

கத்தோலிக்க திருச்சபையின் தலைவா் போப் பிரான்சிஸுக்கான இறுதிச் சடங்கு இன்று மதியம் 1.30 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸின் உட... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: நேபாளத்தில் பாகிஸ்தான் தூதரகம் முன்பு போராட்டம்!

பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து நேபாளத்திலுள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு - காஷ்மீரிலுள்ள பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு: 2 லட்சம் பேர் பங்கேற்பு

வாடிகனில் மறைந்த போப் பிரான்சிஸ் (88) இறுதிச்சடங்கில் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்களும் திரண்டுள்ளனர்.சனிக்கிழமை மதியம் 1.30 மணியள... மேலும் பார்க்க

மியான்மரில் புதிய நிலநடுக்கம் ஏற்படும் எனக் கூறிய டிக்டாக் ஜோசியக்காரர் கைது!

மியான்மர் நாட்டில் புதிய நிலநடுக்கம் ஏற்படும் எனக் கூறி விடியோ வெளியிட்ட டிக்டாக் ஜோசியக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். மியான்மர் நாட்டில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின... மேலும் பார்க்க