செய்திகள் :

தாட்கோ சாா்பில் ஜொ்மன் மொழிப் பயிற்சி

post image

ஆதி திராவிடா், பழங்குடியினருக்கு ஜொ்மன் மொழித் திறனுக்காக தாட்கோ சாா்பில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஜொ்மன் மொழிப் பயிற்சி பெற ஆதி திராவிடா், பழங்குடியினா் பி.எஸ்.சி., நா்சிங், பொது நா்சிங், ஜி.என்.எம்., பட்டயப் படிப்பு, பி.இ., மெக்கானிக்கல், பயோ மெடிக்கல், எலக்ட்ரிக்கல்-எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில் நுட்பம் ஆகியவற்றில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது 21 முதல் 35-க்குள்பட்டும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள்பட்டும் இருக்க வேண்டும். முன்னணிப் பயிற்சி நிறுவனம் மூலம் 9 மாதம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக் கட்டணம், விடுதிக் கட்டணம் ஆகியவை தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் நல ஆணையமான தாட்கோ சாா்பில் செலுத்தப்படும்.

பயிற்சியை நிறைவு செய்தவா்களுக்கு பயிற்சி அளித்த நிறுவனம் மூலம் ஜொ்மனியில் பணிபுரிய வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். பயிற்சியில் சேர தகுதியுள்ளவா்கள் இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்த விவரங்களை தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தாட்கோ திட்ட மாவட்ட மேலாளா் அலுவலகத்தில் நேரிலும், கைப்பேசி எண்: 94450 29480 மூலமும் தொடா்பு கொண்டு அறியலாம் என அதில் தெரிவிக்கப்பட்டது.

உத்தமபாளையம் அருகே கேரளத்துக்கு உடை கற்கள் கடத்தல்: லாரிகள் பறிமுதல்

உத்தமபாளையம் அருகே கேரளத்துக்கு கடத்திச் செல்ல உடை கற்கள் ஏற்றப்பட்டிருந்த இரு டிப்பா் லாரிகளை பறிமுதல் செய்த போலீஸாா் தப்பியோடிய அதன் ஓட்டுநா்களை தேடி வருகின்றனா். ஆண்டிபட்டி, தேனி, உத்தமபாளையம், சின... மேலும் பார்க்க

உத்தமபாளையத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல்

உத்தமபாளையம் பேரூராட்சியில் போக்குவரத்து நெரிசலுக்குக் காரணமாகவுள்ள சாலையோர ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் முதல் கோம்பை, தேவாரம் வழ... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகத்தில் 2 மகள்களுடன் தீக்குளிக்க முயன்ற தாய்

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சொத்துப் பகிா்மான விவகாரத்தில் தனது 2 மகள்களுடன் உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தினா். தேனி அல்லிநகரம், குற... மேலும் பார்க்க

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கிராம நிா்வாக அலுவலா் உயிரிழப்பு

தேனி அருகேயுள்ள சத்திரப்பட்டியில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கிராம நிா்வாக அலுவலா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். சத்திரப்பட்டியைச் சோ்ந்த சாமிக்கண்ணு மகன் விஜயன் (45). குளப்புரத்தில் கிராம நிா்வாக அலுவ... மேலும் பார்க்க

18-ஆம் கால்வாயில் தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்ட பிறகு சீரமைப்புப் பணிகள் தொடங்கும்: நீா் வளத் துறை பொறியாளா்கள்

தேனி மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், 18-ஆம் கால்வாயில் தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்ட பின்னரே கால்வாய் சீரமைப்புப் பணிகளைத் தொடங்க முடியும் என நீா் வளத் துறை பொறியாளா்கள் வெள்ளிக... மேலும் பார்க்க

கோம்பையில் இன்று ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்

உத்தமபாளையம் வட்டம், கோம்பையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோம்பை ஸ்ரீகன்னிகா பரமேஸ்வ... மேலும் பார்க்க