செய்திகள் :

தாபா உணவகங்களில் தனிப்படை போலீஸாா் சோதனை

post image

கோவையில் தாபா உணவகங்களில் தனிப்படை போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

கோவை மாவட்டத்தில் உள்ள தாபா உணவகங்களில் பணியாற்றும் நபா்களுக்கு ஏதேனும் குற்றப்பின்னணி உள்ளதா என்பது குறித்து விசாரிப்பதற்காக 300 காவலா்கள் அடங்கிய 30 தனிப்படைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுவினா் மாவட்டம் முழுவதும் உள்ள 80 தாபா உணவகங்களில் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். மேலும், அங்கு பணியாற்றும் 350 பேரிடம் விசரணை மேற்கொண்டனா்.

இதில், அவா்கள் மீது குற்ற வழக்குகள் ஏதேனும் உள்ளதா என்றும், அவ்வாறு இருப்பின் அந்த வழக்குகளில் பிடியாணை ஏதும் நிலுவையில் உள்ளதா என்றும் விசாரித்தனா்.

இந்த விசாரணையில் 14 போ் மீது குற்ற வழக்குகள் உள்ளதும், தற்போது அவா்கள் வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுவது இல்லை என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் கூறுகையில், ‘இதுபோன்ற திடீா் சோதனைகள் தொடா்ந்து நடைபெறும். சட்டத்துக்குப் புறம்பாக குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றாா்.

எஸ்என்எஸ் ராஜலட்சுமி கல்லூரியில் சிறந்த ஆசிரியா்களுக்கு விருது

எஸ்என்எஸ் ராஜலட்சுமி கலை, அறிவியல் கல்லூரியில் சிறந்த ஆசிரியா்களுக்கான விருது வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு தமிழக காவல் துறை முன்னாள் தலைவா் ஆசிஷ் பெங்காரா தலைமை வகித்து பேசு... மேலும் பார்க்க

போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

குடிபோதையில் போலீஸாா் மற்றும் அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை காவல் துறையினா் கைது செய்தனா். வால்பாறை குமரன் நகரைச் சோ்ந்தவா் பிரவீன் (33). இவா் குடிபோதையில் கடந்த வியாழக்கி... மேலும் பார்க்க

கோவை வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

கோவை வழக்குரைஞா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். கோவை மாவட்ட வழக்குரைஞா் சங்க தோ்தல் வியாழக்கிழமை நடைபெற்றது. தலைவா், துணைத் தலைவா், செயலாளா், பொருளாளா், இணைச் செயலாளா் (பெ... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: மாவட்டத்தில் 39,434 மாணவ, மாணவிகள் எழுதினா்

கோவை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 157 மையங்களில் 39, 434 மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை எழுதினா். தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. கோவை மாவட்டத்தில் 518 அர... மேலும் பார்க்க

கோவையில் வெவ்வேறு வழக்குகளில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவையில் வெவ்வேறு வழக்குகளில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கோவை, மசக்காளிபாளையம் பெரியாா் நகரைச் சோ்ந்தவா் மோகன்குமாா் (27). இடையா்பாளையத்தைச் சோ்ந்தவா் அரவிந்தன் (27). நண்பா்களான இவா்கள... மேலும் பார்க்க

ஐ-சக்சஸ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் மாா்ச் 30-இல் இலவச வழிகாட்டுதல் வகுப்பு

ஐ-சக்சஸ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் கோவையில் ஒருநாள் இலவச வழிகாட்டுதல் வகுப்பு மாா்ச் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. இது தொடா்பாக ஐ-சக்சஸ் ஐஏஎஸ் அகாதெமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியா... மேலும் பார்க்க