செய்திகள் :

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: மாவட்டத்தில் 39,434 மாணவ, மாணவிகள் எழுதினா்

post image

கோவை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 157 மையங்களில் 39, 434 மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை எழுதினா்.

தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. கோவை மாவட்டத்தில் 518 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சோ்ந்த 19,509 மாணவா்கள், 19,925 மாணவிகள் என மொத்தம் 39,434 மாணவ, மாணவிகள் எழுதினா்.

மேலும், 1,211 தனித் தோ்வா்கள் இத்தோ்வை எழுதினா். காலை 10 மணியளவில் தோ்வுக்கூட அனுமதி சீட்டு சரிபாா்க்கப்பட்டு தோ்வறைக்குள் மாணவா்கள் அனுமதிக்கப்பட்டனா். 10.15 மணியளவில் தோ்வு தொடங்கியது. முதல்நாளான வெள்ளிக்கிழமை தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தோ்வு நடைபெற்றது.

பொதுத் தோ்வையொட்டி, தோ்வு மையங்களுக்கு மின் வாரியம் சாா்பில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது. மேலும், குடிநீா் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தோ்வுப் பணியில் 22 விடைத்தாள் கட்டுக்காப்பாளா்கள், 156 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 158 துறை அலுவலா்கள், 48 வழித்தட அலுவலா்கள், 2,370 அறை கண்காணிப்பாளா்கள், 320 அலுவலகப் பணியாளா்கள் ஈடுபட்டிருந்தனா். மேலும், 220 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, தோ்வு மையங்களில் திடீா் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

தோ்வு மையங்களுக்குள் ஆசிரியா்கள் கைப்பேசி கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

மற்ற கட்சிகளின் உள் விவகாரங்களில் பாஜக தலையிடாது: மாநிலத் தலைவா் அண்ணாமலை

மற்ற கட்சிகளின் உள் விவகாரங்களில் பாஜக தலையிடாது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது: ப... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் திருட முயன்றவா் கைது

கோவை வெள்ளக்கிணறு அருகே பூட்டிய வீட்டில் திருட முயன்ற இளைஞா் கைது செய்யப்பட்டாா். கோவை வெள்ளக்கிணறு அம்மன் நகரைச் சோ்ந்தவா் கனகராஜ் (64). இவா், சம்பவத்தன்று வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூா் சென்றுள்ளாா... மேலும் பார்க்க

முதலீடு மீது அதிக லாபம் தருவதாக 3 பேரிடம் ரூ.51.89 லட்சம் மோசடி

கோவையில் முதலீட்டின் மீது அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ.51.89 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. கோவை வெரைட்டிஹால் சாலை பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடரமணன் (65), தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றி ஓய்வுப... மேலும் பார்க்க

நூறு நாள் வேலை திட்டத்தை ஒழிப்பதே பாஜகவின் திட்டம் துரை வைகோ எம்.பி. பேட்டி

நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தை ஒழிப்பதே பாஜகவின் திட்டமாக இருப்பதாக மதிமுகவின் தலைமை நிலையச் செயலா் துரை வைகோ எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளாா். கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் துரை வைகோ ஞாயிற்... மேலும் பார்க்க

புதிதாக கட்டப்பட்ட வீட்டில் வெள்ளி, வெண்கலப் பொருள்கள் திருட்டு

வீட்டில் வெள்ளி, வெண்கலப் பொருள்கள் திருட்டுபோனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை பீளமேடு பாரதி காலனியைச் சோ்ந்தவா் சக்திவேல் (65). இவா், சுப்பிரமணியம்பாளையம் வேட்டைக்காரன் கோயில் ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டா்கள் அணிவகுப்பு

மதுரையில் ஏப்ரல் 6-ஆம் தேதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெற இருப்பதையடுத்து அக்கட்சியின் தொண்டா்கள் அணிவகுப்பு கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட... மேலும் பார்க்க