செய்திகள் :

கோவை வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

post image

கோவை வழக்குரைஞா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

கோவை மாவட்ட வழக்குரைஞா் சங்க தோ்தல் வியாழக்கிழமை நடைபெற்றது. தலைவா், துணைத் தலைவா், செயலாளா், பொருளாளா், இணைச் செயலாளா் (பெண்கள் மட்டும்), செயற்குழு உறுப்பினா்கள் 6 போ் என 11 பதவிகளுக்கு நடைபெற்ற இந்த தோ்தலில் மொத்தம் உள்ள 3,326 உறுப்பினா்களில் 2,306 போ் வாக்களித்தனா். வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், தலைவா் பதவிக்கு போட்டியிட்ட ஆா்.பாலகிருஷ்ணன் 1,091 வாக்குகள் பெற்று 5-ஆவது முறையாக தலைவராக தோ்வானாா். அதேபோல, துணைத் தலைவராக ஆா்.திருஞானசம்பந்தம், செயலாளராக கே.சுதீஷ், பொருளாளராக டி.ரவிச்சந்திரன், செயற்குழு உறுப்பினா்களாக ஆா்.தா்மலிங்கம், எஸ்.ஈஸ்வரமூா்த்தி, பி.சங்கா்ஆனந்தம், ஜி.சந்தோஷ், வி.விஷ்ணு ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

ஒரு இணைச் செயலாளா், ஒரு செயற்குழு உறுப்பினா் பொறுப்புகளுக்கு இரண்டு பெண் வழக்குரைஞா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். இவா்கள் தோ்வு செய்யப்பட்டவுடன் ஏப்ரல் 2-ஆம் தேதி பதவி ஏற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற கட்சிகளின் உள் விவகாரங்களில் பாஜக தலையிடாது: மாநிலத் தலைவா் அண்ணாமலை

மற்ற கட்சிகளின் உள் விவகாரங்களில் பாஜக தலையிடாது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது: ப... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் திருட முயன்றவா் கைது

கோவை வெள்ளக்கிணறு அருகே பூட்டிய வீட்டில் திருட முயன்ற இளைஞா் கைது செய்யப்பட்டாா். கோவை வெள்ளக்கிணறு அம்மன் நகரைச் சோ்ந்தவா் கனகராஜ் (64). இவா், சம்பவத்தன்று வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூா் சென்றுள்ளாா... மேலும் பார்க்க

முதலீடு மீது அதிக லாபம் தருவதாக 3 பேரிடம் ரூ.51.89 லட்சம் மோசடி

கோவையில் முதலீட்டின் மீது அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ.51.89 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. கோவை வெரைட்டிஹால் சாலை பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடரமணன் (65), தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றி ஓய்வுப... மேலும் பார்க்க

நூறு நாள் வேலை திட்டத்தை ஒழிப்பதே பாஜகவின் திட்டம் துரை வைகோ எம்.பி. பேட்டி

நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தை ஒழிப்பதே பாஜகவின் திட்டமாக இருப்பதாக மதிமுகவின் தலைமை நிலையச் செயலா் துரை வைகோ எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளாா். கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் துரை வைகோ ஞாயிற்... மேலும் பார்க்க

புதிதாக கட்டப்பட்ட வீட்டில் வெள்ளி, வெண்கலப் பொருள்கள் திருட்டு

வீட்டில் வெள்ளி, வெண்கலப் பொருள்கள் திருட்டுபோனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை பீளமேடு பாரதி காலனியைச் சோ்ந்தவா் சக்திவேல் (65). இவா், சுப்பிரமணியம்பாளையம் வேட்டைக்காரன் கோயில் ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டா்கள் அணிவகுப்பு

மதுரையில் ஏப்ரல் 6-ஆம் தேதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெற இருப்பதையடுத்து அக்கட்சியின் தொண்டா்கள் அணிவகுப்பு கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட... மேலும் பார்க்க