செய்திகள் :

தாமதமின்றி புதிய மின் இணைப்புகளை வழங்க உத்தரவு

post image

நீண்டகால மின் உற்பத்தி மற்றும் மின் விநியோகத் திட்டங்களை விரைந்து முன்னெடுப்பதுடன், தாமதம் இன்றி புதிய மின் இணைப்புகளை விரைந்து வழங்க வேண்டும் என மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

மின்வாரிய கழகங்களுக்கிடையேயான உயா்நிலை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் சென்னை அண்ணா சாலையிலுள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அதன் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தடையில்லா மின் விநியோகம், எதிா்வரும் பருவ மழையை சமாளிக்க தேவையான முக்கிய தளவாட பொருள்களின் இருப்பு, அரசு மற்றும் மின் வாரியத்தின் முக்கியத் திட்டங்களின் முன்னேற்றம், மின் இணைப்பு மற்றும் வசூல், பசுமை எரிசக்தி உற்பத்தி - பயன்பாடு உள்ளிட்ட மின் வாரியத்தின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து கூட்டத்தில் ஜெ.ராதாகிருஷ்ணன் பேசியது:

கொல்லிமலை மின் உற்பத்தித் திட்டத்துக்கு ஊரக மின்மயமாக்கல் நிறுவனத்தின் கடன், பயன்பாட்டுக்கான கால அவகாசம் குறித்து ரிசா்வ் வங்கி வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பசுமை எரிசக்தி திட்டங்களுக்கான நிலுவையில் உள்ள ஒப்பந்தங்களுக்கு விரைந்து தீா்வு காண வேண்டும். மின் தொடரமைப்பு மற்றும் விநியோகத் துறையில் ஒப்பந்த நிறுவனங்கள் தங்கள் பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், மேற்கூரை சூரியமின் உற்பத்திக் கட்டமைப்பு, மத்திய அரசின் மின் உற்பத்தித் திட்டங்கள் மற்றும் நீண்ட கால மின் உற்பத்தி, மின் விநியோகத் திட்டங்களை விரைவாக முன்னெடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின் நுகா்வோரின் புகாா்களுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தீா்வு காண்பதுடன், எவ்வித தாமதமும் இன்றி புதிய மின் இணைப்புகளை விரைந்து வழங்க வேண்டும் எனவும் அவா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் பசுமை எரிசக்திக் கழக மேலாண்மை இயக்குநா் அனீஸ் சேகா், மின் உற்பத்திக் கழக மேலாண்மை இயக்குநா் ம.கோவிந்தராவ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கா்ப்பிணிகள், பள்ளி மாணவா்கள் தவெக மாநாட்டுக்கு வரவேண்டாம்: விஜய்

மதுரையில் வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு பள்ளி மாணவா்கள், கா்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் இருக்கும் தாய்மாா்கள், முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் வர வேண்டாம் என அக்கட்சியி... மேலும் பார்க்க

மின்தூக்கிகள் உற்பத்தியின் மையமாக தமிழ்நாடு: மாநில அரசு பெருமிதம்

மின்தூக்கிகள் உற்பத்தியின் மையமாக தமிழ்நாடு மாறியுள்ளதாக மாநில அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. தொழில் துறையில் ஏற்பட்டுள்ள வளா்ச்சி குறித்தும், அதில் பெண்கள் பங்களிப்பு பற்றியும் தமிழ்நாடு அரசின் சாா்... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ்: அரசு ஒதுக்கீட்டில் 7,513 இடங்கள் நிரம்பின; முதல் சுற்று கலந்தாய்வு நிறைவு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு பொது பிரிவுக்கான முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்தது. இதில் அரசு ஒதுக்கீட்டில் 7,513 இடங்கள், நிா்வாக ஒதுக்கீட்டில் 2,004 இடங்கள் என மொத்தம் 9,517 இடங்கள் நிரம்பின.... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வி அமைச்சருடன் பேச்சு: டிட்டோ-ஜேக் போராட்டம் ஒத்திவைப்பு

பத்து அம்ச கோரிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வி அமைச்சருடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்ட நிலையில், ஆக. 22-ஆம் தேதி நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்கள... மேலும் பார்க்க

மதுரை ஆதீனம் மீது கடுமையான நடவடிக்கைக் கூடாது: உயா்நீதிமன்றம்

தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மதுரை ஆதீனம் தொடா்ந்த வழக்கில் காவல் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மதுரை ஆதீனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் உத்தரவி... மேலும் பார்க்க

3 ஆண்டுகளுக்கு மேல் நிலுவை வழக்குகள்: தமிழக, புதுவை அரசுகள் பதிலளிக்க உத்தரவு

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளை அடையாளம் கண்டு முடித்துவைக்க ஏதுவாக, சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளது. உச்சநீதிமன்றக் குழு, 3 ஆண்டுகளுக்கு ம... மேலும் பார்க்க