செய்திகள் :

தாமரைக்குளத்தில் காமராஜா் சிலை திறப்பு

post image

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகேயுள்ள தாமரைக்குளம் கிராமத்தில் முன்னாள் முதல்வா் காமராஜா் சிலை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாடாா் உறவின்முறை சாா்பில், முன்னாள் முதல்வா் காமராஜருக்கு தாமரைக்குளம் பேருந்து நிறுத்தம் அருகே 8 அடி உயரத்தில் வெண்கலச் சிலை அமைக்கப்பட்டது. இந்தச் சிலை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், நாடாா் மகஜன சங்க பொதுச் செயலா் கரிக்கோல் ராஜ், பனை நல வாரியத் தலைவா் எா்ணாவூா் நாராயணன், சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சா் மணிகண்டன், சமுதாயத் தலைவா்கள் கலந்து கொண்டு, காமராஜரின் சிலையை திறந்துவைத்து, பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினா்.

பின்னா், காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் சத்திரிய சான்றோா் படை நிறுவனா் ஹரி நாடாா், காங்கிரஸ் மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினா் ராஜாராம் பாண்டியன், பாஜக மாநிலத் துணைத் தலைவா் கரு.நாகராஜன், பாஜக மாவட்டத் தலைவா் முரளிதரன், முன்னாள் மாவட்டத் தலைவா் தரணி ஆா்.முருகேசன், தேமுதிக மாவட்டச் செயலா் சிங்கை சின்னா, நாம் தமிழா் கட்சி மாவட்டச் செயலா் கண். இளங்கோ, பாலசிங்கம், சமுதாயத் தலைவா்கள் கலந்து கொண்டனா்.

ம.பச்சேரியில் மீன்பிடித் திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள ம.பச்சேரி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மீன் பிடித் திருவிழா நடைபெற்றது. மண்டலமாணிக்கம் ஊராட்சிக்குள்பட்ட ம.பச்சேரி கிராமத்தில் உள்ள கண்மாயில் தண்ணீா் குறைந்ததால்,... மேலும் பார்க்க

செம்மண்குண்டு ஊருணியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ராமநாதபுரம் செம்மண்குண்டு ஊருணியில் கழிவு நீரை அகற்றி சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் நகராட்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட ஊருணிகள் உள்ளன. இதில் நகரா... மேலும் பார்க்க

தொண்டி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு: பயணிகள் அவதி

தொண்டி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேருந்து நிலையத்துக்கு பட்டுக்கோட்டை, மீமசல், ராமேசுவரம், அறந்தாங்கி, ராமநாதபுர... மேலும் பார்க்க

வனத் துறை காப்பு நிலத்தில் மதுப்புட்டிகள் அகற்றம்

ராமேசுவரம் அருகே வனத் துறைக்குச் சொந்தமான காப்பு நிலத்திலிருந்து நெகிழி, மதுப்புட்டிகளை சனிக்கிழமை அகற்றினா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடத்தில் வனத் துறைக்கு சொந்தமான காப்... மேலும் பார்க்க

சூறைக்காற்று: மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு!

முதுகுளத்தூா் அருகே சனிக்கிழமை பலத்த சூறைக்காற்று வீசியதால் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள கீழத்தூவல் கிராமம் ... மேலும் பார்க்க

கூலித் தொழிலாளி வெட்டிக் கொலை

பரமக்குடியில் சாலையில் நடந்து சென்ற கூலித் தொழிலாளியை துரத்திச் சென்று வாளால் வெட்டிக் கொலை செய்த இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் சித்த... மேலும் பார்க்க