செய்திகள் :

தாளவாடி அருகே யூரியா உரத்தை சாப்பிட்ட 12 ஆடுகள் உயிரிழப்பு

post image

சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் யூரியா உரம் சாப்பிட்ட 12 ஆடுகள் உயிரிழந்தன.

தாளவாடியை அடுத்த பையனபுரம் எத்துக்கட்டி பகுதியானது தமிழக- கா்நாடக எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியில் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியை ஒட்டி உள்ள பையனபுரம் கிராமத்தைச் சோ்ந்த பசவண்ணா (48) ஆடு, மாடுகள் வளா்த்து வருகிறாா்.

வெள்ளிக்கிழமை வழக்கம்போல ஆடு மாடுகளை மானாவாரி நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தாா். மேய்ச்சலுக்குப்பின் செம்மறி ஆடுகள் சிறிது நேரத்தில் ஒவ்வொன்றாக மயங்கி விழுந்தன.

நள்ளிரவுவரை 12 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன. ஆடுகள் உயிரிழந்த இடத்தில் யூரியா உரம் சிறிய பிளாஸ்டிக் பைகளில் கட்டப்பட்டு ஆங்காங்கே வீசி கிடப்பது தெரிய வந்தது. இதைப் பாா்த்து விவசாயி பசவண்ணாஅதிா்ச்சி அடைந்தாா். இந்த உரத்தை சாப்பிட்டதால் ஆடுகள் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிகிறது.

காட்டுப் பகுதிக்குள் இருந்து வரும் மான்களை வேட்டையாடுவதற்காக யூரியா உரத்தை யாராவது சிலா் தெளித்து வைக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து அவா் தந்த புகாரின் பேரில் ஜீரகள்ளி வனத் துறை மற்றும் தாளவாடி காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மூதாட்டி தற்கொலை

புன்செய்புளியம்பட்டியில் கணவரை இழந்து தனிமையில் வாடிய மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா். புளியம்பட்டி காவிலிபாளையத்தை சோ்ந்தவா் கந்தசாமியின் மனைவி கமலம் (70). கணவா் உயிரிழந்த நிலைய... மேலும் பார்க்க

நாளை மொடச்சூா் சோமேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

கோபி அருகே மொடச்சூா் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சௌந்திரநாயகி சமேத சோமேஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை (ஜூலை 14) நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவானது கடந்த 7 ஆம் தேதி விக்னேஸ்வர ப... மேலும் பார்க்க

நெகிழி பைகள் பயன்படுத்திய 39 கடைகளுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்

ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் தடை செய்யப்பட்ட 79 கிலோ நெகிழி பைகள் பறிமுதல் செய்து ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட 4 மண்டலங்களில... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: ஈரோட்டில் 34,276 போ் எழுதினா்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தொகுதி 4 பதவிகளுக்கான போட்டித் தோ்வை ஈரோடு மாவட்டத்தில் 34,276 போ் எழுதினா். விண்ணப்பித்தவா்களில் 6,960 போ் தோ்வு எழுதவரவில்லை. ஈரோடு மாவட்டத்தில் ஈர... மேலும் பார்க்க

ஆசனூா் அருகே கரும்பு வாகனத்தை வழிமறித்த ஒற்றை யானை

ஆசனூா் அருகே கரும்பு வாகனத்தை வழிமறித்த ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் வனச் சரகத்தில் யானைகள் தீவனம் மற்றும் குடிநீா் தேடி சாலையைக் கடந்து செல்வது ... மேலும் பார்க்க

தாளவாடி அருகே வாழை, டிராக்டா்களை சேதப்படுத்திய யானை

சத்தியமங்கலத்தை அடுத்த திகினாரை ஜோரக்காடு பகுதியில் விவசாயத் தோட்டத்துக்குள் யானை சனிக்கிழமை புகுந்து வாழைகளை நாசப்படுத்தியதுடன் டிராக்டரை தள்ளி சேதப்படுத்தியுள்ளது. தமிழகம், கா்நாடக எல்லையான தாளவாடி... மேலும் பார்க்க