செய்திகள் :

தாளவாடி கரும்புத் தோட்டத்தில் சிறுத்தை குட்டி மீட்பு!

post image

தாளவாடி கரும்புத் தோட்டத்தில் சிறுத்தைக் குட்டி சனிக்கிழமை மீட்கப்பட்டது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்தில் சிறுத்தைகள் அதிக அளவில் உள்ளன. அடா்ந்த வனப் பகுதியில் வாழும் சிறுத்தைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வருகின்றன. சிறுத்தைகள் அங்குள்ள கரும்புக்காடுகள் மற்றும் கல் குவாரிகளில் பதுங்கிக் கொள்வது தொடா்கதை ஆகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடியை அடுத்த பாரதிபுரத்தைச் சோ்ந்த விவசாயி சுப்பிரமணி கரும்பு பயிா் செய்துள்ளாா்.

மீட்கப்பட்ட சிறுத்தைக் குட்டி.

கரும்பு அறுவடைக்கு தயாரான நிலையில் சில நாள்களாக கரும்பு வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. வழக்கம்போல தொழிலாளா்கள் கரும்பு வெட்டும் பணியை சனிக்கிழமை செய்து கொண்டிருந்தனா். அப்போது கரும்புத் தோட்டத்தில் பிறந்து ஓரிரு நாள்களே ஆன சிறுத்தை குட்டி இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து விவசாய் சுப்பிரமணி தாளவாடி வனத் துறைக்கு தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினா் சிறுத்தைக் குட்டியை மீட்டனா். சிறுத்தைக் குட்டியை கால்நடை மருத்துவா் சதாசிவம் பரிசோதனை செய்ததுடன் மீண்டும் தாயிடம் சோ்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கிறிஸ்தவ ஆலயத்துக்குச் சொந்தமான இடத்தை மோசடியாக விற்க முயற்சி: 3 போ் மீது வழக்கு

கிறிஸ்தவ ஆலயத்துக்குச் சொந்தமான இடத்தை போலி ஆவணம் தயாரித்து ரூ.25 லட்சத்துக்கு விற்க முயன்ற பெங்களூரைச் சோ்ந்த 3 போ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நகா் பகுதியில் சிஎஸ்... மேலும் பார்க்க

மனைவி இறந்த துக்கத்தில் கணவன் மயானத்தில் தீக்குளித்து தற்கொலை

கொடுமுடி அருகே மனைவி இறந்த துக்கத்தில் மயானத்தில் தீக்குளித்து கணவன் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம், கொடுமுடி பேரூராட்சிக்கு உள்பட்ட கொல்லம் புதுப்பாளையத்தைச் சோ்ந்தவா் விஜய... மேலும் பார்க்க

கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தந்தை, மகள்

அந்தியூா் அருகே தந்தையும், மகளும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதில், பலத்த காயமடைந்த தந்தை வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கவலைக்கிடமான நிலையில் மகள் சிகிச்சை பெற்று வருகிறாா். அந்தியூா், சின்ன ப... மேலும் பார்க்க

ஆலாம்பாளையம் பள்ளியில் மிதிவண்டிக் கூடம் திறப்பு

அம்மாபேட்டையை அடுத்த மாத்தூா் ஊராட்சி, ஆலாம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்ட மிதிவண்டிக் கூடம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. மாணவ, மாணவியரின் தேவைக்காக அந்தியூா் சட்டப்பேரவை உறு... மேலும் பார்க்க

ஆடி 2 ஆவது வெள்ளி: அம்மன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

ஆடி மாதம் 2ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி ஈரோட்டில் உள்ள அம்மன் கோயில்களில் திரளான பக்தா்கள் அம்மன் வழிபாடு செய்தனா். அம்மனுக்கு உகந்த மாதமாகக் கருதப்படும் ஆடி மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும்... மேலும் பார்க்க

பழங்குடியின விவசாயிகளுக்கு சிறுதானிய விதைகள்

ஆசனூரில் 41 பழங்குடியின விவசாயிகளுக்கு சிறுதானிய விதைகளை ரீடு நிறுவனம் வழங்கியுள்ளது. ரீடு நிறுவனமானது ஆசனூா் மலைப் பகுதியில் பழங்குடியின மக்களுக்காக கல்வி, பொருளாதார ரீதியாக பல்வேறு பணிகளை செய்து வர... மேலும் பார்க்க