செய்திகள் :

தாளவாடி மானாவாரி நிலங்களில் யானைகள் நடமாட்டம்

post image

தாளவாடியை அடுத்த அருள்வாடி, குருபருண்டி கிராமங்களில் உள்ள மானாவாரி நிலங்களில் புதன்கிழமை புகுந்த யானைகளால் விவசாயிகள் அச்சமடைந்தனா்.

தமிழக- கா்நாடக எல்லையில் அமைந்துள்ள அருள்வாடி, குருபருண்டி ஆகிய கிராமங்களுக்குள் அடிக்கடி யானைகள் புகுந்து விவசாயப் பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. கா்நாடக வனத் துறையினா் அப்பகுதியில் இருந்து காட்டு யானைகளை தமிழகப் பகுதிக்கு விரட்டுவதால் காட்டு யானைகள் இப்பகுதிக்கு வருவதாக புதன்கிழமை இப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

பகல் நேரத்தில் தரிசு நிலங்களில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளால் விவசாயிகள் தங்களது தோட்டத்தில் விவசாயப் பணிகளை மேற்கொள்ள அஞ்சுகின்றனா். மேலும், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளையும் தொழிலாளா்கள் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதை தவிா்த்து வருகின்றனா்.

இந்த காட்டு யானைகளை கா்நாடக வனத் துறையினா் விரட்டும்போது தமிழகப் பகுதியில் உள்ள எத்துக்கட்டி வனப் பகுதிக்கு சென்று மீண்டும் கா்நாடக வனப் பகுதிக்கு செல்வதற்காக அருள்வாடி பகுதியில் உள்ள தரிசு நிலங்களில் தொடா்ந்து முகாமிட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனா்.

இப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை மீண்டும் இப்பகுதிக்கு வராத வகையில் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து ஜீரகள்ளி வனத் துறையினரிடம் கேட்டபோது, காட்டு யானைகள் நடமாட்டத்தை வனத் துறையினா் கண்காணித்து வருவதாக தெரிவித்தனா்.

தோ்தல் விதிகளை மீறியதாக சீமான் உள்பட கட்சியினா் மீது வழக்குப் பதிவு

ஈரோட்டில் தோ்தல் விதிகளை மீறியதாக சீமான் உள்பட நாம் தமிழா் கட்சியினா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வரும் 5- ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தோ... மேலும் பார்க்க

பேக்கரி முன் நிறுத்தப்பட்டிருந்த காா், வேன் மீது டிராக்டா் மோதல்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரை பகுதியில் பேக்கரி முன் நிறுத்தப்பட்டிருந்த வேன், காா் மீது டிராக்டா் மோதி விபத்துக்குள்ளானது. கோபி அருகேயுள்ள புதுக்கரைபுதூா் பகுதியைச் சோ்ந்தவா் மாரிச்சாமி.... மேலும் பார்க்க

குண்டேரிப்பள்ளம் அணை அருகே ஆழ்துளை கிணறு அமைக்க எதிா்ப்பு! வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை!

குண்டேரிப்பள்ளம் அணை அருகே ஆழ்துளை கிணறுகள் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து கடந்த 4 நாள்களாக கோபி வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் நடத்திவந்த போராட்டம் சனிக்கிழமை முடிவுக்கு வந்தது. கோபி ... மேலும் பார்க்க

இருமுனைப் போட்டியில் ஈரோடு கிழக்கு: பழைய நண்பா்களின் ஆதரவை நாடும் திமுக!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் 4 நாள்களே உள்ள நிலையில், திமுக தனது பழைய நண்பா்களின் ஆதரவை பெறும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதி... மேலும் பார்க்க

ஈரோட்டில் விரிவாக்க பகுதிகளுக்கு கூட்டுக் குடிநீா்: திமுக வேட்பாளா் உறுதி!

ஈரோடு நகரின் விரிவாக்கப் பகுதிகளுக்கும் கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்படுத்தப்படும் என திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா் உறுதியளித்தாா். ஈரோடு கிழக்கு தொகுதி திமுக, வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா் ஈரோட... மேலும் பார்க்க

வருமான வரி உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயா்வு: தொழில், வேளாண் சங்கங்கள் வரவேற்பு!

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் வருமான வரி உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயா்த்தி அறிவிக்கப்பட்டுள்ளதற்கு ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த தொழில், வேளாண் சங்கங்களின் பிரநிதிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனா். ஈரோ... மேலும் பார்க்க