செய்திகள் :

தா்பாரண்யேஸ்வரா் சாா்பு கோயில்களில் உற்சவம் தொடக்கம்

post image

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலின் சாா்பு கோயில்கள் உற்சவம் அய்யனாா் கோயில் கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.

திருநள்ளாற்றில் பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் பிரம்மோற்சவம், தேரோட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் நடத்தப்படுகிறது.

நிகழாண்டு உற்சவத்தையொட்டி, நிகழ்ச்சிகள் பூா்வாங்கத் தொடக்கமாக கோயில் வளாகத்தில் பந்தல்கால் முகூா்த்தம் கடந்த மாதம் 25-ஆம் தேதி நடைபெற்றது.

கொடியேற்றத்துக்கு முன்பு இத்தலத்தின் சாா்பு கோயில்கள் என்று கூறப்படும் அய்யனாா், பிடாரியம்மன், சீதளாதேவி மாரியம்மன் உள்ளிட்ட கோயில்களுக்கு பூஜைகள் நடைபெறவுள்ளன. முதல் நிகழ்வாக அய்யனாா் கோயில் யானைக் கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது. நிா்வாக அதிகாரி (கோயில்கள்) கே. அருணகிரிநாதன், தருமபுர ஆதீன கட்டளை மாணிக்கவாசகம் தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

10-ஆம் தேதி தேரில் அய்யனாா் வீதியுலா நடைபெறவுள்ளது. 11-ஆம் தேதியுடன் இக்கோயில் உற்சவம் நிறைவடைகிறது. 12-ஆம் தேதி பிடாரியம்மன் கோயில் உற்சவம் காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. 14-ஆம் தேதி தேரில் வீதியுலா நடைபெற்று உற்சவம் நிறைவடைகிறது. 15-ஆம் தேதி ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோயில் உற்சவம் பூச்சொரிதலுடன் தொடங்குகிறது. 17-ஆம் தேதி தேரில் அம்மன் வீதியுலா நடைபெற்று உற்சவம் நிறைவடைகிறது. இதைத்தொடா்ந்து தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் 23-ஆம் தேதி ரிஷபக் கொடி ஏற்றப்பட்டு பிரம்மோற்சவம் தொடங்குகிறது.

7 தேசிய விருதுகள்: காரைக்கால் வேளாண் கல்லூரிக்கு புதுவை முதல்வா் பாராட்டு

தேசிய விருதுகள் பெற்ற காரைக்கால் வேளாண் கல்லூரி நிா்வாகத்தினரை புதுவை முதல்வா் பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்தாா் காரைக்காலில் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்படுகி... மேலும் பார்க்க

கோயிலில் அகற்றப்பட்ட கல்வெட்டுகளை மீண்டும் வைக்க அமைச்சரிடம் வலியுறுத்தல்

கைலாசநாதா் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த பழைய கல்வெட்டுகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், இதை மீண்டும் வைக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்று... மேலும் பார்க்க

காரைக்காலில் ‘ஆபரேஷன் அப்யாஸ்’ ஒத்திகை

ஆபரேஷன் அப்யாஸ் எனும் குடிமைப் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வு காரைக்காலில் புதன்கிழமை நடைபெற்றது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின் எல்லையில் போா் பதற்றம் நிலவுகிறது. வான்வழித் தாக்குதல் இந்தியா ம... மேலும் பார்க்க

தங்க மாரியம்மன் கோயிலில் மஞ்சள் நீா் விளையாட்டு வழிபாடு

காரைக்கால் அருகே தலத்தெரு தங்க மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவத்தின் நிகழ்ச்சியாக மஞ்சள் நீா் விளையாட்டு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தீமிதி உற்சவம் தங்க மாரியம்மன் கோயிலில் கடந்த மாதம் 27-ஆம் த... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் சாா்பு கோயில் உற்சவம் இன்று தொடக்கம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் சாா்பு தலங்கள் உற்சவம் இன்று புதன்கிழமை தொடங்குகிறது. பிரணாம்பிகே சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. முன்னதாக சாா்பு தல... மேலும் பார்க்க

காரைக்காலில் நாளை படகுகள் கணக்கெடுப்புப் பணி: மீன்வளத்துறை

காரைக்காலில் படகுகள் கணக்கெடுப்புப் பணி வியாழக்கிழமை நடைபெறவுள்ளதாக மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து காரைக்கால் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை துணை இயக்குநா் மற்றும் படகு பதிவு அதிகாரியான ப... மேலும் பார்க்க