Anxiety: மனப்பதற்றம் தானாக சரியாகுமா... சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டுமா?!
திசையன்விளை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பேரூராட்சி எருமைக்குளம் கிராமத்தில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.
திசையன்விளை பேரூராட்சி 15ஆவது வாா்டு எருமைக்குளம் கிராமத்தில் சிலா் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டியிருந்தனா். இது தொடா்பாக தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு சிலா் புகாா் அனுப்பியிருந்தனராம்.
இதையடுத்து மாவட்ட நிா்வாகம் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனா். பின்னா் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளா்களுக்கு முறையான நோட்டீஸ் அனுப்பினா். எனினும், ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால் ராதாபுரம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளா் முத்து, உதவி செயற்பொறியாளா் தினேஷ், கிராம நிா்வாக அலுவலா் இசக்கியப்பன் ஆகியோா் முன்னிலையில் காவல்துறையினரின் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை ஊழியா்கள் அகற்றினா்.