செய்திகள் :

திடீரென வெடித்து சிதறிய பட்டாசு - துண்டு துண்டான பொள்ளாச்சி விவசாயியின் கை விரல்கள்... என்ன நடந்தது?

post image

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள பானும்பலம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி முத்துக்குமார். இவர் நேற்று தன் வீட்டில் இருந்தபோது பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் அவரது வலது கையில் உள்ள ஐந்து விரல்களும் துண்டாகின.

மேலும் தொடை, மார்பு பகுதியிலும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து  அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

முத்துக்குமார் தோட்டத்துக்கு யானை வந்ததாகவும் அந்த யானையை விரட்டுவதற்காக அவர் பட்டாசு வீசியதாகவும்... அப்போது திடீரென பட்டாசு வெடித்து விபத்து நிகழ்ந்ததாகவும் முதலில் தகவல் வெளியானது.

முத்துக்குமார்

இதனால் அதிர்ச்சி ஏற்பட்டது. இது குறித்து பொள்ளாச்சி வனச்சரகர் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்தனர். அதில் முத்துக்குமார் யானையை விரட்டுவதற்காக பட்டாசு வீசவில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது.

இது குறித்து வனத்துறையினர்  கூறுகையில், “முத்துக்குமார் கேரளாவில் இருந்து வெடி பொருள் வாங்கி தன் பண்ணையில் வைத்திருந்தார். வன எல்லையிலிருந்து 500 மீட்டர் தொலைவில் அவரின் பண்ணை உள்ளது. இரவில் அவர் தோட்டத்தில் தீ வைத்திருக்கிறார்.

வனத்துறையினர் ஆய்வு

அந்த நேரத்தில் தீப்பொறி தற்செயலாக பட்டாசு வைக்கப்பட்டிருந்த பையில் பட்டு முழு பட்டாசுகளும் வெடித்தன. அவர் எந்த யானையையும் விரட்டவில்லை. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.” என்றனர்.

புதுக்கோட்டையில் மனைவியைச் சரமாரியாக வெட்டிக் கொன்ற கணவர்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள எம்.ராசியமங்கலத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மகள் இந்திராணி (வயது 37).இவருக்கு ஏற்கனவே திருமணமாகி தவபாலன் (வயது 12) என்ற ஆண் குழந்தை உள்ள நிலையில், கணவரு... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: `அப்பா ஆம்புலன்ஸில போறார், ப்ளீஸ் விடுங்கண்ணா’ - கெஞ்சிய சிறுவனிடம் செல்போன் பறித்த மூவர்

தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுவன். அவரின் தந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைத்த அந்த சிறுவன் தன் தந்தையை அதில் ஏற்றி விட்டுள்ளார். ஆம்புலன்... மேலும் பார்க்க

தலையில் அரிவாளால் வெட்டி சென்னை வழக்கறிஞர் படுகொலை

சென்னை விருகம்பாக்கம், கணபதி ராஜ் நகர் மெயின் ரோடு பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக விருகம்பாக்கம் காவல் நிலையத்துக்குத் தகவல் வந்தது.உடனடியாக போலீஸார்... மேலும் பார்க்க

``மீரட்டில் நடந்த கொலையைப் போல..'' - காதலனுடன் சேர்ந்து கணவனை மிரட்டிய மனைவி; உ.பி.,யில் அதிர்ச்சி

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் முஸ்கான் என்ற பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டார். நாளடைவில் புதுக்காதலன் உடன் ஏற்பட்ட நெருக்கத்தால் காதல் கணவனை புதுக்காதலனோடு சேர்ந்து கொலை செய்து டிரம்மில் அடைத்... மேலும் பார்க்க

வயிற்று வலி; ஏர்போர்ட் கழிவறைக்கு சென்று குழந்தைபெற்று குப்பை தொட்டியில் போட்ட கல்லூரி மாணவி

மும்பை விமான நிலையத்தில் உள்ள கழிவறையில் இருந்த குப்பை தொட்டியில் குழந்தை ஒன்றின் உடல் கிடந்தது. அதனை பார்த்த துப்புரவு தொழிலாளி இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். பிறந்தவுடன் குழந்தை ... மேலும் பார்க்க

"தன்னுடன் பேச மறுத்ததால் உயிரோடு தீ வைத்த காதலன்" - சிகிச்சை பலனின்றி இளம்பெண் உயிரிழந்த பரிதாபம்!

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகேயுள்ள இளம்புவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி காளியம்மாள். கருத்து வேறுபாடு காரணமாக காளியம்மாள் தனது கணவரை பிரிந்து தனது 2 மகன்கள் மற்றும் மகளுடன... மேலும் பார்க்க