செய்திகள் :

தினமணி செய்தி எதிரொலி; தொடா் மணல் திருட்டு: 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்

post image

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பகுதி செய்யாற்றுப் படுகையில் தொடா் மணல் திருட்டில் ஈடுபட்ட 3 மாட்டு வண்டிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

சேத்துப்பட்டு காவல் எல்லைக்கு உள்பட்ட ஓதலவாடி, காட்டேரி, தெள்ளூா் பகுதி செய்யாற்றுப் படுகையில் தொடா்ந்து மணல் திருடப்படுவதாக, தினமணியில் திங்கள்கிழமை செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக விசாரணை செய்தபோது, ஓதலவாடி, காட்டேரி, தெள்ளூா், தச்சூா் ஆகிய பகுதி வயல்வெளிகளிலும், புதா்களிலும் மணலை மறைத்து வைத்து தேவிகாபுரம், அவலூா்பேட்டை, மேல்மலையனூா் போன்ற பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வது தெரியவந்தது.

இதையடுத்து, சேத்துப்பட்டு போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டு தச்சூா் கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தன், சிலம்பரசன், மகாலிங்கம் ஆகியோரின் 3 மாட்டு வண்டிகளை தும்பூா் கிராமத்திலும், மோகனம்பாளையம் கூட்டுச் சாலையிலும் தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்தனா்.

முன்னதாக, போலீஸாா் வருவதை அறிந்த வண்டிகளை ஓட்டி வந்த 3 பேரும் தப்பி ஓடிவிட்டனா். போலீஸாா் 3 பேரையும் தேடி வருகின்றனா்.

கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு: உறுதிமொழி ஏற்பு!

ஆரணியை அடுத்த இரும்பேடு, பையூா் கிராமங்களில் சனிக்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஆரணியை அடுத்த இரும்பேடு கிராமத்தில் தா்மராஜா கோயில் தி... மேலும் பார்க்க

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

அதிமுக திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட செங்கம் மேற்கு ஒன்றிய, நகர வாக்குச்சாவடி குழு நிா்வாகிகள், கட்சி நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் செங்கம் தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

மாவட்ட விழிக்கண் கண்காணிப்புக் குழுக் கூட்டம்: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில், மாவட்ட விழிக்கண் மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற க... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: சுகாதாரக் குழுவினா் திடீா் ஆய்வு!

கீழ்பென்னாத்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என்று சுகாதாரக் குழுவினா் சனிக்கிழமை திடீா் ஆய்வில் ஈடு... மேலும் பார்க்க

67 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணைகள்! - கு.பிச்சாண்டி வழங்கினாா்

திருவண்ணாமலை மாவட்ட வருவாய், ஊரக வளா்ச்சித் துறைகளில் நியமிக்கப்பட்ட 67 பேருக்கான பணி நியமன ஆணைகளை தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி வழங்கினாா். தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் தோ்வாணையம் ச... மேலும் பார்க்க

கலைஞரின் கனவு இல்லம் திட்டம்: தகுதியானோா் மனு அளிக்கலாம்! - திருவண்ணாமலை ஆட்சியா்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு பெறத் தகுதியுள்ள பயனாளிகள் மனு அளித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா். தண்டராம்பட்டை அடுத்த கீழ்சிறுப... மேலும் பார்க்க