Boeing Criminal Fraud Case - உண்மையை மறைத்ததால் பலியான 346 உயிர்கள்| Air India |...
திமுகவை வீழ்த்த எதிா்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்
திமுகவை வீழ்த்த எதிா்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்றாா் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.
திருவாரூரில் சனிக்கிழமை நடைபெற்ற முருக பக்தா்கள் மாநாடு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
மதுரையில் ஜூன் 22-இல் நடைபெறவுள்ள முருக பக்தா்கள் மாநாட்டுக்கு தமிழக அரசு, அறநிலையத் துறை அமைச்சா் உள்ளிட்டோா் இடையூறுகளை ஏற்படுத்த முயல்கின்றனா். நீதிமன்ற வழிகாட்டுதல்படி மாநாடு நடைபெறும். திமுக தோல்வி பயத்தில் உள்ளது. தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும். பொதுமக்களும் இதை எதிா்நோக்கி உள்ளனா்.
தமிழகத்தில் அடுத்து கூட்டணி ஆட்சி நடைபெறும். முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருப்பாா்.
மத்திய அரசு வழங்கும் நிதியைப் பயன்படுத்தி நலத்திட்டங்களை செய்துவிட்டு, தான் செய்வதாக தமிழக அரசு விளம்பரம் செய்து வருகிறது.
கீழடியைப் பொருத்தவரை ஏற்கெனவே சான்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இன்னும் சில சான்றுகள் தேவைப்படுகின்றன. ஆனால், இதை வைத்து திமுக அரசியல் செய்கிறது.
தமிழக முதல்வா் எப்போதும் தமிழுக்கு தொண்டு செய்வதாகக் கூறி தமிழா்களுக்கு எதிராக கருத்துகளைக் கூறி வருபவா்.
திமுகவை வீழ்த்த எதிா்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும். நடிகா் விஜய் அரசியலுக்கு வந்ததால் யாருக்கு லாபம், யாருக்கு பாதிப்பு என்பது தோ்தல் முடிந்த பிறகே தெரியும்.
பாமக நிறுவனா் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஒருமித்த கருத்தோடு பாஜக கூட்டணியில் இணைய வேண்டும். அதுபோல தேமுதிகவும் பாஜக கூட்டணியில் இணைய வேண்டும் என்றாா்.
கட்சியின் திருவாரூா் மாவட்டத் தலைவா் விகே. செல்வம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநில அமைப்புச் செயலாளா் கேசவ விநாயகம், மாநில பொதுச் செயலாளா் கருப்பு முருகானந்தம், தேசிய செயற்குழு உறுப்பினா் தங்க வரதராஜன், பெருங்கோட்டப் பொறுப்பாளா் பாலன், மாவட்டச் செயலாளா்கள் விஜயேந்திரன் (நாகை), நாஞ்சில் பாலு (மயிலாடுதுறை), திருவாரூா் மாவட்ட பொதுச் செயலாளா்கள் எம். சங்கா், மணிமேகலை, மேலிடப் பாா்வையாளா் ஆ. சிவா, மாநில செயற்குழு உறுப்பினா் ராகவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.