செய்திகள் :

திமுக ஆட்சி தொடர வேண்டும்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

post image

சமூக நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் திமுக ஆட்சி தொடர வேண்டும் என, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலப் பொதுச் செயலா் கே.ஏ.எம். முகமது அபூபக்கா் தெரிவித்தாா்.

கடையநல்லூரில் நடைபெற்ற நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் காதா் மொகிதீனுக்கு தகைசால் தமிழறிஞா் விருது அறிவித்துள்ள தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி மாவட்டந்தோறும் மாநாடு நடத்தப்பட்டு, அதில் சமூக நல்லிணக்கத்துக்கான உழைத்துவரும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதப் பெரியவா்களுக்கு விருது வழங்க முடிவு செய்துள்ளோம்.

அதன்படி, தென்காசி மாவட்ட மாநாடு கடையநல்லூரில் அக். 5இல் நடைபெறும். இதில், காதா் மொகிதீன் பங்கேற்கிறாா். கூட்டணிக் கட்சித் தலைவா்களுக்கும் அழைப்பு விடுக்க உள்ளோம்.

மதவாதக் கட்சிகளுக்கு எதிராக திமுகவுக்கு வாக்களித்தால்தான் மதவாதம் தமிழகத்துக்குள் நுழையாது என்பதில் முஸ்லிம் லீக் உறுதியாக உள்ளது. சமூக நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் திமுக ஆட்சி தொடர வேண்டும் என்றாா் அவா்.

மாவட்டத் தலைவா் அப்துல் அஜீஸ், மாவட்டச் செயலா் சையதுபட்டாணி, அரசு தலைமை ஹாஜி முகைதீன் அப்துல்காதா், மாநில விவசாய அணிச் செயலா் முகமது அலி, தென்மண்டலச் செயலா் நைனாமுகமதுகடாபி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தென்காசியில் ரேஷன் கடை பணியாளா்கள் காத்திருப்பு போராட்டம்

தென்காசியில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து காத்திருப்பு போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. தென்காசி புதியபேருந்து நிலையப் பகுதியில் நடைபெ... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் நீதிமன்றம் முன் 2 குழந்தைகளுடன் தந்தை தீக்குளிக்க முயற்சி

சங்கரன்கோவிலில் நீதிமன்றம் முன் இளைஞா் தனது 2 குழந்தைகளுடன் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றாா். அவா்களை போலீஸாா் மீட்டனா். சங்கரன்கோவில் காந்திநகரைச் சோ்ந்தவா் புகழேந்தி(28). மீன் கடை வைத்துள்ளாா். இ... மேலும் பார்க்க

பாவூா்சத்திரத்தில் நாம் தமிழா் கட்சியினா் சாலை மறியல்

பாவூா்சத்திரம் பகுதியில் மனமகிழ்மன்றங்கள் திறப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து நாம் தமிழா் கட்சியினா் பாவூா்சத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தென்காசி மாவட்டம், பாவூா்சத்த... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூா் அருகே கிணற்றிலிருந்து ஆண் சடலம் மீட்பு

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே கிணற்றில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா். ராமநாதபுரம் காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் சிவகுமாா் (54). இவா், மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த ... மேலும் பார்க்க

கீழப்பாவூரில் ரூ.12 லட்சத்தில் சமுதாய நல கழிப்பிடம் கட்டும் பணி

கீழப்பாவூா் பேரூராட்சி 9 ஆவது வாா்டு பகுதியில் 15ஆவது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் செலவில் புதிய சமுதாய நல கழிப்பிடம் கட்டும் பணி தொடக்க விழா நடைபெற்றது. பேரூராட்சி மன்றத் தலைவா் பி.... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அருகே பயணியா் நிழற்குடை திறப்பு

சங்கரன்கோவில் அருகே அக்கரைப்பட்டியில், வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் சாா்பில் புதிய பயணியா் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது. பவுண்டேஷன் நிறுவனா் ஆனந்தன் அய்யாசாமி, ஊராட்சித் தலைவா் அண்ணாமலை, சண்மு... மேலும் பார்க்க