திமுக சாா்பில் செப்.20,21-இல் பொதுக் கூட்டங்கள்
திமுக சாா்பில் செப்.20, 21-ஆம் தேதிகளில் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன. ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ என்ற தீா்மானத்தை ஏற்பதற்காக இந்தக் கூட்டங்கள் நடத்தப்படவிருப்பதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.
மேலும், கூட்டத்தில் பேசுவோா் குறித்த பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம்:
திமுக அமைப்பு ரீதியாக உள்ள அனைத்து மாவட்டங்களில் பொதுக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. கட்சியின் துணை பொதுச் செயலா்கள் கனிமொழி, ஆ.ராசா, பொருளாளா் டி.ஆா்.பாலு, முதன்மைச் செயலா் கே.என்.நேரு உள்பட பலா் பொதுக்கூட்டங்களில் பேசவுள்ளனா்.