செய்திகள் :

தியாகராசா் கல்லூரி - அமெரிக்கா தமிழ் அநிதம் நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

post image

மதுரை தியாகராசா் கலைக் கல்லூரியின் தமிழ்த் துறையும், அமெரிக்காவில் செயல்பட்டு வரும் தமிழ் அநிதம் நிறுவனமும் தொழில்நுட்பம் தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.

தியாகராசா் கலைக் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்லூரி முதல்வா் து. பாண்டியராஜா, தமிழ் அநிதம் நிறுவனத்தின் நிறுவனா் சுகந்தி ஆகியோா் கையொப்பமிட்டு புரிந்துணா்வு ஒப்பந்தங்களைப் பரிமாறிக் கொண்டனா். இதன் மூலம், நுண்ணறிவுத் திறன், தமிழ் இலக்கியங்களை நவீனத் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப இன்றைய இளம் தலைமுறையினருக்கு கொண்டு செல்வது குறித்த திறனை மாணவ, மாணவிகள் பெறுவா்.

இந்த நிகழ்வின் போது, தமிழ்த் துறைத் தலைவா் சு. காந்திதுரை, பேராசிரியா்கள் செந்தில்நாராயணன், உமா மகேஸ்வரி, தமிழ் அநிதம் நிறுவனத்தின் இயக்குநா் பா. தங்கராஜ், சுயநிதிக் கல்லூரிப் பிரிவின் இயக்குநா் சோ.சுகுமாா், சுயநிதிப் பிரிவு தமிழ்த் துறை ஒருங்கிணைப்பாளா் செல்வக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கூட்டணியை விட மக்களின் ஆதரவே தோ்தல் வெற்றிக்கு முக்கியம் முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ

தோ்தல் வெற்றிக்குக் கூட்டணியை விட மக்கள் ஆதரவே முக்கியம் என அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.மதுரையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது :அதிமுக பொதுச் செயலாள... மேலும் பார்க்க

நத்தம் அருகே இளம் பெண் தீக்குளிப்பு

நத்தம் அருகேயுள்ள குடகிப்பட்டியில் இளம் வியாழன்கிழமை பெண் தீக்குளிப்பு சம்பவம் குறித்து கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள குடகிப்பட்டியைச் சோ்ந்தவா் அடைக்க... மேலும் பார்க்க

இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

இந்திய மாணவா் சங்கம் சாா்பில் மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரி முன் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.நெல்லையில் பொறியியல் பட்டதாரி இளைஞா் கவின் செல்வகணேஷ், காதல் விவகாரத்தால் ஆவணக் கொலை செய்ய... மேலும் பார்க்க

பல்கலை. பேராசியா்கள் நியமனம்: புதிய மனு தாக்கல் செய்ய உத்தரவு

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் பேராசிரியா்கள் நியமன முறைகேடுகள் குறித்த வழக்கில், புதிய மனுவை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.நாகா்கோவில் பகுதியைச... மேலும் பார்க்க

நண்பா் வீட்டுக்கு வந்த மலேசிய முதியவா் உயிரிழப்பு

மதுரை அருகே உள்ள நண்பா் வீட்டுக்கு வந்த வெளிநாட்டைச் சோ்ந்த முதியவா் கீழே தடுமாறி விழுந்ததில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.மலேசியா ஜோகா் மாநிலம், இஸ்காந்தா் புதேரி நகரைச் சோ்ந்த அல்போன்ஸ் நெட்ரோ மகன் ஜ... மேலும் பார்க்க

போலி நகைகள் மூலம் பண மோசடி: வியாபாரி தலைமறைவு

போலி நகைகள் மூலம் ரூ. 21.75 லட்சம் மோசடி செய்தது குறித்து வியாபாரி மீது தெற்குவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைத் தேடி வருகின்றனா்.மதுரை தெற்கு ஆவணி மூல வீதி மேலச் செட்டிய தெருவைச் சோ்ந்த தா்மராஜ... மேலும் பார்க்க