செய்திகள் :

திரிபுரா: இளைஞரைக் கொன்று ஐஸ்கிரீம் பெட்டியில் வைத்த நபர்; முக்கோண காதல் விவகாரத்தில் என்ன நடந்தது?

post image

திரிபுரா மாநிலம் அகார்த்தலாவைச் சேர்ந்த சரிபுல் இஸ்லாம் (28) என்ற வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென காணாமல் போய்விட்டார்.

இது தொடர்பாக சரிபுல் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

விசாரணையில் சரிபுல் பெண் ஒருவரைக் காதலித்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அது பற்றி விசாரித்த போது சரிபுல் காதலித்த பெண் டாக்டர் திபாகர் சாஹா என்பவரின் மாமா மகள் என்று தெரிய வந்தது.

போலீஸ் கைது
போலீஸ் கைது

அதோடு திபாகரும் சரிபுல் காதலித்த அதே பெண்ணைக் காதலித்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து திபாகரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில், சரிபுலைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இக்கொலை தொடர்பாக டாக்டர் திபாகர், அவரது பெற்றோர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ''சரிபுலிடம் பரிசு ஒன்று கொடுப்பதாகக் கூறி திபாகர் ஜாய்தீப் என்பவரது வீட்டிற்கு வரவழைத்தார்.

திபாகர், அவருடன் இருந்த அனிமேஷ், நபனிதா ஆகியோருடன் சேர்ந்து சரிபுலைக் கழுத்தை நெரித்து கொலை செய்தனர். அதனைத் தொடர்ந்து புதிதாக வாங்கப்பட்ட டிராலி பேக்கில் சரிபுல் உடலை வைத்தனர்.

அடுத்த நாள் காலையில் திபாகர் பெற்றோர் வந்து உடல் இருந்த டிராலி பேக்கை எடுத்துச்சென்றனர். அவர்கள் தங்களது கடையிலிருந்த ஐஸ் கிரீம் குளிர்சாதனப் பெட்டியில் உடலை மறைத்து வைத்தனர்.

குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

கைதானவர்கள்
கைதானவர்கள்

முக்கோண காதல்

மூன்று பேரும் மொபைல் போனில் மெசேஜ் பகிர்ந்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் போலீஸார் தெரிவித்தனர். சரிபுல் காதலித்த பெண்ணின் தந்தை சமீபத்தில் இறந்து போனார். ஆனால் அப்பெண்ணிற்கு சரிபுல் துணையாக இருந்தார்.

எனவே சரிபுலைக் கொலை செய்தால்தான் தன் பக்கம் அப்பெண் வருவார் என்று கருதி மருத்துவர் திபாகர் இக்கொலையைத் திட்டமிட்டுச் செய்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

``உடல், மன ரீதியான பிரச்னை..'' - கிரானைட் முறைகேடு வழக்கில் இருந்து விடுவிக்க துரை தயாநிதி மனு

அரசுக்கு ரூ.259 கோடி இழப்பீடு ஏற்படுத்தியதாக மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் ஒலிம்பஸ் நிறுவனம் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கிலிருந்து விடுவிக்க துரை தயாநிதி தரப்பில் மனு... மேலும் பார்க்க

பீகார்: பாஜக கொடியுடன் வந்த SUV கார்; காவலர்கள் மீது மோதியதில் பெண் காவலர் பலி; ஒட்டுநர் கைது

பீகார் மாநிலம் பாட்னாவின் ஸ்ரீகிருஷ்ணா பூரி பகுதிக்கு அருகே, அடல் பாத் பகுதியில் வாகனப் பரிசோதனையிலிருந்த காவல்கள் மீது கார் மோதியது.வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட மூன்று காவலர்களும் உடனடியாக அருகி... மேலும் பார்க்க

Ooty: ஈட்டி மரங்கள் மீது அத்துமீறல்; பிரபல கான்ட்ரக்டர் ராயன் மீது வழக்கு; வனச் சட்டம் சொல்வது என்ன?

நீலகிரி மாவட்டத்தில் ஈட்டி, சந்தனம், தேக்கு போன்ற விலை உயர்ந்த மரங்கள் அதிகளவில் உள்ளன. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள்‌ மட்டுமின்றி தனியாருக்குச் சொந்தமான நிலங்களிலும் இந்த வகை மரங்கள் காணப்படுகின்றன.தன... மேலும் பார்க்க

Operation Honeymoon: "சோனம் மீது சந்தேகம் வர இதான் காரணம்..." - மேகாலயா டிஜஜி சொல்வது என்ன?

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்சியும், அவரது மனைவி சோனமும் கடந்த மாதம் 21ம் மேகாலயாவிற்குத் தேனிலவிற்குச் சென்றனர்.சென்ற இடத்தில் அவர்கள் இருவரும் கடந்த 23ம் தேதி திடீரென காணாமல்... மேலும் பார்க்க

திருச்சி: காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ. 10,000 லஞ்சம் - பில் கலெக்டர் சிக்கியது எப்படி?

திருச்சி, கே.கே.நகரில் உள்ள இந்திரா காந்தி தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன்.இவர், தனது மனைவி அறிவுச்செல்வி பெயரில் உள்ள திருச்சி, கொட்டப்பட்டு கிராமம், அன்பில் நகரில் சுமார் 5920 சதுரடி உள்ள காலிமனைக்கு ... மேலும் பார்க்க

வழக்கிலிருந்து விடுவிக்க ரூ.7 லட்சம் லஞ்சம்? - ஆசிரியர் புகார்... சிபிஐ அதிகாரி மீது வழக்கு பதிவு!

வழக்கிலிருந்து விடுவிப்பதற்காக ஆசிரியரிடம் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் சிபிஐ அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆசிரியர் ராமச்சந்திரன்வருமான வரி மோசடி புகார் தொ... மேலும் பார்க்க