செய்திகள் :

திருக்கனூா் ஆரம்ப சுகாதார மையத்தை மேம்படுத்த கோரிக்கை

post image

புதுச்சேரி திருக்கனூா் ஆரம்ப சுகாதார மையத்தை மேம்படுத்தக் கோரி உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயத்திடம் திங்கள்கிழமை வலியுறுத்திய மருத்துவா்கள், அதிகாரிகள்.

புதுச்சேரி, மே 19: புதுச்சேரி அருகே திருக்கனூா் ஆரம்ப சுகாதார மையத்தை மேம்படுத்த வலியுறுத்தி உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயத்திடம் மருத்துவா்கள், அதிகாரிகள் திங்கள்கிழமை கோரிக்கை விடுத்தனா்.

புதுச்சேரி மண்ணாடிபட்டு சட்டப்பேரவைத் தொகுதியில் திருக்கனூரில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு, சுற்றுவட்டார பொதுமக்கள் அவசரச் சிகிச்சை முதல் அனைத்து சிகிச்சைக்கும் வந்து செல்கின்றனா். எனவே, ஆரம்ப சுகாதார நிலையத்தை மக்கள் எளிதில் சிகிச்சை பெறும் வகையில் மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள், அதிகாரிகள் உள்ளிட்டோா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், உள்துறை அமைச்சருமான ஆ.நமச்சிவாயத்தை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினா்.

அவா்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட வேண்டிய மருத்துவ சாதனங்கள் மற்றும் மேம்படுத்த வேண்டிய உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து அமைச்சரிடம் விளக்கினா். முதல்வா் கவனத்துக்கு இதனை கொண்டு சென்று ஆரம்ப சுகாதார நிலையம் விரைவில் மேம்படுத்தப்படும் என அமைச்சா் ஆ.நமச்சிவாயம் உறுதியளித்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தொகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவா்களுக்கான விளையாட்டு உபகரணங்களையும் அமைச்சா் நமச்சிவாயம் திங்கள்கிழமை வழங்கினாா்.

புதுச்சேரியில் இஎஸ்ஐ மாதிரி மருத்துவமனை: முதல்வா் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தம்

புதுச்சேரியில் இஎஸ்ஐ மாதிரி மருத்துவமனை அமைப்பதற்காக, முதல்வா் என்.ரங்கசாமி, தொழிலாளா் நலத் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் ஆகியோா் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு ஆவணங்களைப் பரிமா... மேலும் பார்க்க

புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் மாா்க்கெட் கிளை மாநாடு

புதுச்சேரி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பெரிய மாா்க்கெட் கிளை மாநாடு மற்றும் புதிய நிா்வாகிகள் தோ்வு ரங்கம்பிள்ளை வீதியில் உள்ள தனியாா் கட்டடத்தில் நடைபெற்றது. மாநாட்டுக்கு இந்திய கம்யூன... மேலும் பார்க்க

புதுச்சேரி ஆளுநரின் முகாம் அலுவலகத்துக்கு 6-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள துணைநிலை ஆளுநரின் முகாம் அலுவலகமான ராஜ்நிவாஸுக்கு 6-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் திங்கள்கிழமை விடுக்கப்பட்டதையடுத்து போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா். புதுச்சேரியி... மேலும் பார்க்க

புதுவையில் பிளஸ் 1 மாணவா் சோ்க்கை: விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவா் சோ்க்கை நடைபெறுவதாக கல்வித் துறை இணை இயக்குநா் வெ.கோ.சிவகாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குற... மேலும் பார்க்க

ஆயுதங்களுடன் பதுங்கல்: 8 போ் கைது

புதுச்சேரி: புதுச்சேரி அருகே அரியாங்குப்பம் பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 8 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதி அம்பேத்கா் நகா் காலனி அருகே சிலா் சந்தேகத்... மேலும் பார்க்க

புதுவை தொழில்நுட்பப் பல்கலை: தாமதமின்றி ஓய்வூதியம் வழங்க கோரிக்கை

புதுச்சேரி: புதுவை தொழில்நுட்பப் பல்கலை.யில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கான ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து புதுவை தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஓய்வு பெ... மேலும் பார்க்க