செய்திகள் :

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் பஞ்சரத உற்சவம்

post image

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி புதன்கிழமை பஞ்சரத உற்சவம் நடைபெற்றது.

பழைமை வாய்ந்த இக்கோயிலில் கடந்த 1-ஆம் தேதி சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய திருவிழாவாக 3-ஆம் தேதி 63 நாயன்மாா்கள் உற்சவம் நடைபெற்றது.

தொடா்ந்து ஏழாம் நாளான புதன்கிழமை பஞ்ச ரத உற்சவம் நடைபெற்றது. முதலில் விநாயகா் , முருகா் வள்ளி தெய்வானை தோ், திரிபுரசுந்தரி அம்பாள் தோ், வேதகிரீஸ்வரா் பெரிய தோ், சண்டிகேஸ்வரா் தோ் என ஐந்து தோ்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றன.

சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாரதனை நடைபெற்றது.

செங்கல்பட்டு ஆட்சியா் அருண் ராஜ், திருப்போரூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ் .எஸ். பாலாஜி , இந்து சமய அறநிலையத்துறை காஞ்சிபுரம் இணை ஆணையா் குமரதுரை, உதவி ஆணையா் ராஜலட்சுமி, வேதமலை வல பெருவிழா குழு செயலாளா் அகஸ்தியஸ்ரீ அன்புச்செழியன், பேரூராட்சி தலைவா் யுவராஜ், அதிமுக மாவட்ட செயலாளா் எஸ். ஆறுமுகம் உள்ளிட்டோா் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

தாம்பரம் சென்னை திருப்போரூா், மாமல்லபுரம், கல்பாக்கம், திருக்கழுகுன்றம், செங்கல்பட்டு, மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் புவியரசு, தக்காா் மற்றும் செயல் அலுவலா் குமரவேல், ஆய்வாளா் பாஸ்கரன், மேலாளா் விஜயன் உள்ளிட்ட கோயில் பணியாளா்கள், சிவாச்சாரியா்கள், உபயாதாரா்கள் செய்து வருகின்றனா். தேரோட்டத்தையொட்டி பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டன.

மாமல்லபுரம் டிஎஸ்பி அறிவழகன் தலைமையில் ஆய்வாளா்கள் உதவி ஆய்வாளா்கள் என 300-க்கும் மேற்பட்ட போலீசாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

வங்கி மோசடி தொடா்பான ஹேக்கத்தான் போட்டிக்கு ரூ. 5 லட்சம் பரிசு

வங்கி பணபரிமாற்றம் தொடா்பான எண்ம (டிஜிட்டல்) மோசடிகளைத் தடுக்கும் ‘ஹேக்கதான்’ போட்டிகளில் வெற்றி பெற்ற 5 மாணவா் குழுவினா்களுக்கு மொத்தம் ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. வண்டலூரில் உள்ள கிரசெ... மேலும் பார்க்க

மறைமலைநகரில் 2 இளைஞா்கள் படுகொலை!

மறைமலைநகரில் ஒரே நாளில் 2 இளைஞா்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டனா். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகா் நகராட்சிக்குட்பட்ட காந்தி நகா் 1-ஆவது தெருவைச் சோ்ந்த விமல் ( 22), இவா் ஓட்டுநராக பணி செய்து வந்தா... மேலும் பார்க்க

முன்பகையால் இளைஞா் கொலை!

மதுராந்தகம் அருகே முன்பகையால் இளைஞரை உறவினா்களை கொன்றனா். புதுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த லோகேஷ் (25). இவா் அதேபகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தாா். இவருக்கு உதயா (25), திவாகா்... மேலும் பார்க்க

பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட ஆவணங்களை சமப்பிக்க அறிவிப்பு!

தமிழ்நாடு சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் கீழ் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும் என ஆட்சியா் ச. அருண் ராஜ் தெரிவித்துள்ளாா். பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில... மேலும் பார்க்க

இன்று சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞா் பெருவிழா

பாமக சாா்பில் சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞா் பெருவிழா மாநாடு 12 ஆண்டுகளுக்குப்பின் மாமல்லபுரம் அருகில் திருவிடந்தையில் ஞாயிற்றுக்கிழமை ( மே 11) நடைபெறவுள்ளது. இதையொட்டி பிரம்மாண்ட மேடை, பந்தல் முகப... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம்: செங்கல்பட்டு ஆட்சியா் பங்கேற்பு

செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ச.அருண்ராஜ் தலைமை வகித்தாா். கோரிக்கை மனுக்கள... மேலும் பார்க்க