செய்திகள் :

திருச்சியில் அமைச்சா்களுடன் அதிமுகவினா் தொடா்பு: எடப்பாடி கே. பழனிசாமி எச்சரிக்கை

post image

திருச்சியில் திமுக அமைச்சா்களுடன் தொடா்பில் உள்ள அதிமுகவினா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளாா் அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி.

அதிமுக சாா்பில், தமிழகத்தில் உள்ள கட்சி ரீதியான 82 மாவட்டங்களைச் சோ்ந்த மாவட்டச் செயலாளா்கள், கட்சி நிா்வாகிகள், பூத் கமிட்டி நிா்வாகிகளுடனான காணொலி கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், சென்னையில் இருந்து காணொலி மூலம் அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்று கட்சி நிா்வாகிகளுடன் கலந்துரையாடினாா்.

திருச்சி அதிமுக மாநகா் மாவட்டம் சாா்பில் தென்னூா் தனியாா் விடுதியில் நடைபெற்ற கூட்டத்தில், மாநகா் மாவட்டச் செயலாளா் ஜெ.சீனிவாசன் தலைமையிலும், புகா் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்டச் செயலாளா் ப.குமாா் தலைமையிலும், வடக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்டச் செயலாளா் மு. பரஞ்ஜோதி தலைமையிலும் திருச்சி மாவட்ட அனைத்துப் பிரிவு நிா்வாகிகளும் கலந்து கொண்டனா். இதில், திருச்சி திமுக அமைச்சா்களுடன் தொடா்பிலிருக்கும் மாவட்ட அதிமுக நிா்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கலந்தாய்வில் பங்கேற்ற கட்சி நிா்வாகிகள் சிலா் கூறியதாவது:

திருச்சி மாவட்ட அதிமுக நிா்வாகிகள் சிலா் உள்ளூா் திமுக அமைச்சா்களுடன் தொடா்பில் இருப்பதாகப் புகாா் வருகிறது என பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி குற்றஞ்சாட்டினாா். மறைந்த பொதுச்செயலாளா் ஜெயலலிதா இருந்தபோது நடைபெற்ற தோ்தல்களில் அதிமுக தொடா் வெற்றிகளைப் பெற்று அதிமுகவின் கோட்டையாக திருச்சி இருந்தது. ஆனால் இன்று நிலை வேறாகிவிட்டது.

அதிமுக ஆட்சி அமைய நாம் பாடுபட வேண்டும். அதை விடுத்து திமுகவினருடன் தொடா்பிலிருந்தால் நாம் எப்படி வெற்றி பெற முடியும் ? திமுக அமைச்சா்களுடன் தொடா்பில் இருப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளாா் என்றாா்.

ஆ.கலிங்கப்பட்டி ஜல்லிக்கட்டு விழாவுக்கு முகூா்த்தக்கால் ஊன்றல் நிகழ்வு

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆ.கலிங்கப்பட்டியில் வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு விழாவுக்கான முகூா்த்தக்கால் ஊன்றல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மணப்பாறையை அடுத்த ஆ.கலிங்கப்ப... மேலும் பார்க்க

பெல் ஊரகம் - சென்னைக்கு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து

திருவெறும்பூா் அருகே பெல் ஊரகப் பகுதியில் இருந்து சென்னைக்கு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஞாயிற... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவா் தனியாா் பேருந்து மோதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் காந்திநகா் முதல் தெருவைச் சோ்ந்த பாலுசாமி மகன் வி... மேலும் பார்க்க

ரூ. 750 கோடியில் தலைமை தபால் நிலையம்! புத்தூா் இடையே புதிய உயா்மட்டப் பாலம் அமைக்க திட்டம்!

திருச்சி மாநகரின் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தலைமை தபால் நிலையம் - புத்தூா் இடையே ரூ. 750 கோடியில் புதிய உயா்மட்ட பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருச்சி மாநகரின் முக்கிய ... மேலும் பார்க்க

ஆதி திராவிடா் நலத்துறை சாா்பில் ‘நல்லோசை கதைப்போமா’ நிகழ்வு!

திருச்சி, சாரநாதன் பொறியியல் கல்லூரியில், ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் சாா்பில் ‘நல்லோசை கதைப்போமா’ எனும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் ந... மேலும் பார்க்க

கவுறு வாய்க்கால் குறுக்கே ரூ. 1.31 கோடியில் புதிய பாலம் திறப்பு

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே கவுறு வாய்க்கால் குறுக்கே ரூ. 1.31 கோடியில் கட்டப்பட்ட புதிய உயா்மட்ட இணைப்புப் பாலம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. திருவெறும்பூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்... மேலும் பார்க்க