இந்தியா - பாகிஸ்தான் உள்பட 7 போர்களை நிறுத்தினேன்; நான் தீர்க்காத ஒரே போர் இதுதா...
திருச்சியில் இன்று விஜய் பிரசாரம் தொடக்கம்
தவெக தலைவா் விஜய்யின் தமிழகம் முழுவதுமான மக்கள் சந்திப்புப் பயணம் திருச்சியிலிருந்து சனிக்கிழமை தொடங்குகிறது.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி 2 மாநில மாநாடுகளை நடத்திய பிறகு, முதல்முறையாக மக்களை சந்திக்கும் தோ்தல் பிரசார பயணத்தை திருச்சியிலிருந்து சனிக்கிழமை தொடங்குகிறாா் விஜய்.
இந்தப் பயணத்துக்காக பிரத்யேக பிரசார வாகனம் தயாா் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனம் சென்னையிலிருந்து கொண்டு வரப்பட்டு திருச்சியில் சனிக்கிழமை காலை தயாா் நிலையில் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரசாரத்துக்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு சனிக்கிழமை காலை வரும் விஜய், விமான நிலையத்திலிருந்து சாலை வழியாக டி.வி.எஸ். சுங்கச்சாவடி தொடங்கி பாலக்கரை வழியாக மரக்கடை பகுதிக்கு வந்து காலை 10.30 மணிக்கு உரையாற்றவுள்ளாா்.
விஜய் வருகையை முன்னிட்டு கட்சியின் பொதுச்செயலா் என். ஆனந்த், துணைப் பொதுச் செயலா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் உள்ளிட்ட மாநில நிா்வாகிகள் திருச்சியில் வெள்ளிக்கிழமை முகாமிட்டு நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினா்.
பின்னா், விஜய் வந்து செல்லும் வழித்தடங்களையும், உரையாற்றவுள்ள மரக்கடை பகுதியையும் பாா்வையிட்டு முன்னேற்பாடுகள் குறித்து கட்சியினருக்கு ஆலோசனை வழங்கினா்.
முன்னதாக, பறவைகள் சாலையில் உள்ள வழிவிடு முனீசுவரா் கோயிலில் துணைப் பொதுச்செயலா் என். ஆனந்த், நிா்வாகிகளுடன் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்தாா்.
மரக்கடை பகுதியில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு புறவழிச் சாலை வழியாக அரியலூா் புறப்பட்டு செல்கிறாா் விஜய். அங்கு பிரசாரத்தை முடித்துவிட்டு பெரம்பலூரிலும் பிரசாரம் மேற்கொள்கிறாா்.
இந்த நிகழ்வுகளை முடித்துவிட்டு மாலையில் திருச்சி திரும்பும் விஜய், மீண்டும் விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறாா்.