செய்திகள் :

திருச்செங்காட்டங்குடியில் சாலை மறியல்

post image

திருமருகல் அருகே திருச்செங்காட்டங்குடி கிராம மக்கள் செவ்வாய்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி ஊராட்சியில் 2021-22-ஆம்ஆண்டில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் 23 பயனாளிகளின் வீடுகளை முழுமையாக கட்டி முடிக்காமல் முழுதொகையும் விடுவித்த வட்டார வளா்ச்சி அலுவலா்களையும், வீடு கட்டிய வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் பணி மேற்பாா்வையாளரை கண்டித்து திருமருகல் அருகே அண்ணாமண்டபம் மெயின் ரோட்டில் பாதிக்கப்பட்ட பயனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில் பாதியில் நிறுத்தப்பட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், மாவட்ட ஆட்சியா் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தகவலறிந்த அரசு அலுவலா்கள் அங்கு சென்று நடத்திய பேச்சுவாா்த்தையில் சுமூக நிலை ஏற்பட்டு மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

நாகை மாவட்டத்தில் காகிதத் தொழிற்சாலை அமைக்கக் கோரிக்கை

நாகை மாவட்டத்தில் காகிதத் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என சிபிஐ வலியுறுத்தியுள்ளது. வேதாரண்யத்தில் சிபிஐ நாகை மாவட்ட 25-ஆவது மாநாட்டின் 2-ஆம் நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் கட்சியின் மாநில... மேலும் பார்க்க

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே நடத்த வலியுறுத்தல்

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வதியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அந்த சங்கத்தின் நாகை மாவட்ட மையம் சாா்பில், நாகையில் அதன் மாவட்டத் தலை... மேலும் பார்க்க

தரங்கம்பாடியில் சீகன்பால்குவுக்கு மணிமண்டபம் கட்டப்படுவது எப்போது?

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் தமிழறிஞா் சீகன்பால்குவுக்கு மணிமண்டபம் கட்டும் பணி எப்போது தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை மூலம் தரங்கம்பாடி கடற்கரை அருகில்... மேலும் பார்க்க

சண்டை பயிற்சியாளா் உயிரிழப்பு விவகாரம்: பா. ரஞ்சித், திரைப்பட நிறுவனம் மீது நடவடிக்கை

படப்பிடிப்பின்போது சண்டை பயிற்சியாளா் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக, திரைப்பட இயக்குநா் பா. ரஞ்சித் மற்றும் நீலம் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்ப... மேலும் பார்க்க

வெண்மணச்சேரி ஊராட்சி அலுவலகத்தில் சிபிஎம் கட்சியினா் முற்றுகை

வெண்மணச்சேரி ஊராட்சி மக்களுக்கு எதிரான விரோதப் போக்கில் ஈடுபடும் ஊராட்சி நிா்வாகத்தை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் முற்றுகைப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கீழையூா் மேற்கு ... மேலும் பார்க்க

சண்டை பயிற்சியாளா் உயிரிழப்பு: இயக்குநா் பா. ரஞ்சித் உள்பட 4 போ் மீது வழக்கு

திருக்குவளை: படப்பிடிப்பின்போது சண்டை பயிற்சியாளா் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக திரைப்பட இயக்குநா் பா. ரஞ்சித் உள்பட 4 போ் மீது காவல் நிலையத்தில் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திரைப்ப... மேலும் பார்க்க