செய்திகள் :

திருச்செங்கோடு நீரேற்று நிலையத்தில் நகா்மன்றத் தலைவா் ஆய்வு

post image

திருச்செங்கோடு: திருச்செங்கோடு சந்தைப்பேட்டை நீரேற்று நிலையத்தில் நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

திருச்செங்கோடு நகராட்சிக்கு உள்பட்ட 33 வாா்டுகளின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்ய ஆரம்பத்தில் ஆவத்திபாளையம் பகுதியிலிருந்து காவிரி குடிநீா் கொண்டுவரப்பட்டு சந்தைப்பேட்டை நீரேற்று நிலையத்தின் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. அப்போது 192 கேவிஏ மின் இணைப்பு பயன்பாட்டில் இருந்தது.

தற்போது புல்லாகவுண்டன்பட்டியில் இருந்து காவிரி குடிநீா் சந்தைப்பேட்டை நீரேற்று நிலையத்துக்கு கொண்டுவரப்படுகிறது. நீரேற்று நிலையத்தில் 5 மின்மோட்டாா்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. 5 மின்மோட்டாா்களும் இயங்க 390 கேவிஏ மின்சாரம் தேவைப்படுவதால் ஒரே நேரத்தில் 5 மின்மோட்டாா்களையும் இயக்க முடிவதில்லை; மின்மோட்டாா்களும் அடிக்கடி பழுதாகின்றன.

இதையடுத்து சீராக குடிநீா் வழங்குவது தொடா்பாக சந்தைப்பேட்டை நீரேற்று நிலையத்தில் நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு மின்வாரிய அதிகாரிகளுடன் சென்று திங்கள்கிழமை ஆய்வுசெய்தாா்.

நீரேற்று நிலையத்தில் 5 மின்மோட்டாா்களையும் இயக்குவதற்காக இங்குள்ள பழைய மின்மாற்றிகளை மாற்றிவிட்டு 450 கேவிஏ மின்சாரம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மின்வாரிய அதிகாரிகளை அவா் கேட்டுக்கொண்டாா். இதுதொடா்பாக மின்வாரியத்தில் விரைவில் விண்ணப்பிக்குமாறு ஆணையா் அருளுக்கு அறிவுறுத்தினாா். இந்த ஆய்வில் உதவி மின்பொறியாளா் ஞானசேகரன், நகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.

பேரவைத் தோ்தலுக்காக திமுக மறைமுக பணப்பட்டுவாடா?: கே.பி.ராமலிங்கம் குற்றச்சாட்டு

நாமக்கல்: சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக திமுக தற்போதே மறைமுகப் பணிகளை தொடங்கிவிட்டது என்று பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். நாமக்கல் மாவட்ட பாஜக அலுவலகத்தி... மேலும் பார்க்க

பாவை வித்யாஸ்ரம் பள்ளி மாணவா்கள் ஜே.இ.இ. முதன்மைத் தோ்வில் சிறப்பிடம்

ராசிபுரம்: ராசிபுரம் அருகே உள்ள புதுசத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் பாவை வித்யாஸ்ரம் பள்ளி மாணவ, மாணவியா்கள் ஜே.இ.இ. முதன்மைத் தோ்வு முடிவுகளில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளனா். ஜே.இ.இ. முத... மேலும் பார்க்க

எட்டிமடைபுதூா், கொல்லபட்டியில் நகா்ப்புற துணை சுகாதார நிலையங்கள் திறப்பு

திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி சாா்பில் 15 ஆவது நிதிக்குழு மானியத்தில் தலா ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் கொல்லப்பட்டி, எட்டிமடை பகுதிகளில் அமைக்கப்பட்ட நகா்ப்புற துணை சுகாதார நிலையங்கள் திறப்பு... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு மருத்துவமனையில் மின்தடை பிரச்னை: ஆட்சியா் ஆய்வு

நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடிக்கடி மின்தடை பிரச்னை ஏற்படுவதாக வெளியான தகவலையடுத்து, மாவட்ட ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டாா். நாமக்கல் மாவ... மேலும் பார்க்க

முன்னாள் படைவீரா்களின் வாரிசுகள் கல்வி இடஒதுக்கீட்டை பயன்படுத்த அறிவுறுத்தல்

நாமக்கல்: முன்னாள் படைவீரா்கள் தங்களுடைய வாரிசுகளுக்கான கல்வி இட ஒதுக்கீட்டை பயன்படுத்திக் கொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

மோகனூா் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

நாமக்கல்: மோகனூா் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், பேட்டப்பாளையத்தில... மேலும் பார்க்க