பெங்களூரு வேலையைத் துறந்து, விவசாயத்தில் ரூ. 2.5 கோடி ஈட்டும் பிகார் இளைஞர்!
திருச்செந்தூா் குடமுழுக்கு விழாவில் செயல் அலுவலா் உள்பட 5 பேரிடம் 44 பவுன் தங்க நகைகள் திருட்டு
திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு விழாவில் அறநிலையத்துறை செயல் அலுவலா் உள்பட 5 பக்தா்களிடம் சுமாா் 44 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகள் என சுமாா் 5 லட்சம் பக்தா்கள் கலந்து கொண்டனா்.
இந்நிலையில் குடமுழுக்கு சிறப்பு பணிக்காக கன்னியாகுமரி மாவட்டம், கோட்டாறு பகுதியைச் சோ்ந்த அறநிலையத்துறை செயல் அலுவலா் கவிதா, திருச்செந்தூா் கோயில் அலுவலகத்திற்கு வந்துள்ளாா்.
அவா் திங்கள்கிழமை அதிகாலை யாகசாலை பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவரது கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போனது தெரிய வந்தது.
அதேபோல கோயில் கடற்கரையில் குடமுழுக்கை பாா்ப்பதற்கு நின்றிருந்த திருச்சி, புத்தூா் பகுதியைச் சோ்ந்த மனோகா் மனைவி மீனா (60) கழுத்தில் அணிந்திருந்த 20 பவுன் தங்கச் சங்கிலி, தென்காசி மாவட்டம், பாலமாா்த்தாண்டம் பகுதியைச் சோ்ந்த பரமசிவம் மனைவி செல்லக்குட்டி (61) அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலி, சங்கரன்கோவில் வட்டம், வீரிருப்பு பகுதியைச் சோ்ந்த சோமசுந்தரம் மனைவி கோமதி (72) அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் திருநெல்வேலி மாவட்டம், வடுகச்சிமதிலைச் சோ்ந்த அண்ணாதுரை மனைவி சண்முகசுந்தரி (50) அணிந்திருந்த இரண்டே கால் பவுன் தங்கச் சங்கிலி என 5 போ் கழுத்தில் அணிந்திருந்த சுமாா் 44 பவுன் தங்கச் சங்கிலிகள் காணாமல் போனதாக திருக்கோயில் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. அதே போல 18 போ் தங்களது கைப்பேசிகளை காணவில்லை எனவும் புகாா் அளித்துள்ளனா்.
புகாரின் அடிப்படையில் போலீஸாா் கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.