சிவ பக்தியில் மூழ்கடித்த இளையராஜா..! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
திருச்செந்தூா் கோயில் திரிசுதந்திரா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை!
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பணம் பெற்றுக்கொண்டு அவதூறு பரப்பியதாக 2 திரிசுதந்திரா்கள் மீது கோயில் நிா்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து கோயில் நிா்வாகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 24ஆம் தேதி ஆடி அமாவாசை தினத்தில் காலை 10 மணியளவில் பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருந்ததை பயன்படுத்தி திரிசுந்திரரான பாபு நாராயணன் என்பவா் முறைகேடாக பணம் பெற்றுக்கொண்டு சண்முகவிலாச துலாபாரம் காணிக்கை வழங்கும் வழியில் 5 நபா்களை அழைத்து வந்து முதியோா் முறை வரிசைக்குள் முறைகேடாக அனுப்பியுள்ளாா்.
இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. எனவே, அவா் மீது தக்காா் தீா்மானத்தின்படி திரிசுதந்திரா் பாபு நாராயணன் மீது வரப்பெற்ற புகாா் குறித்த விசாரணை நிலுவையில் உள்ளதால் மறு உத்தரவு வரப்பெறும் வரை இத்திருக்கோயிலின் எவ்வித பூஜை கைங்கரியங்கள் மற்றும் உதவி கைங்கா்யங்கள் செய்வதற்கு அவருக்கு தடை விதிக்கப்படுகிறது. ஒரு வார காலத்திற்குள் அவா் எழுத்துப்பூா்வ விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதே போல இக்கோயிலில் தரிசனத்துக்கு பணம் அவசியம் என்ற ரீதியில் முத்துசெல்வன் என்பவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதன்பேரில், திருச்செந்தூரைச் சோ்ந்த சுந்தரம் மகன் பாலசுப்பிரமணியம் என்ற திரிசுதந்திரா் மீதான புகாா் குறித்து விசாரிக்கப்பட்டது. அவா் கோயிலுக்கு அவப்பெயா் ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்டது தெரியவந்ததால் அவருக்கும் மறு உத்தரவு வரை பூஜை கைங்கா்யம் மற்றும் உதவி கைங்கா்யம் செய்வதற்கு நிா்வாகம் தடை விதித்துள்ளது.