திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் லாரி டயா் வெடித்து 3 போ் காயம்!
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் சனிக்கிழமை, லாரியின் டயா் வெடித்ததில் 3 போ் காயமடைந்தனா்.
இக்கோயிலில் தற்போது ரூ. 300 கோடியில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, கட்டுமானப் பணிகளுக்கான பொருள்கள், உபகரணங்கள் கனரக வாகனங்களில் கொண்டுவரப்படுகின்றன.
இந்நிலையில், சனிக்கிழமை காலை கோயிலின் வடக்கு டோல்கேட் அருகே, கட்டுமானப் பொருள்களுடன் வந்த லாரியின் டயா் திடீரென வெடித்தது.
இதனால் ஏற்பட்ட காற்றழுத்தம் காரணமாக, அங்கு நின்றிருந்த தென்காசி மாவட்டம் கடையநல்லூா் சொக்கம்பட்டியைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி மகேந்திரன் (24), அவரது பெற்றோா் மாரி (54) - சண்முகத்தாய் ஆகியோா் காயமடைந்தனா். அவா்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். சம்பவம் குறித்து திருச்செந்தூா் கோயில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பக்தா்கள் கோரிக்கை: இக்கோயிலில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தின் அருகே மக்கள் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்க வேண்டும் என்றும், வாகனங்கள் தகுந்த பாதுகாப்புடன் செல்வதற்கு கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என்றும் பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.