நடுவழியில் துர்நாற்றம், தொழில்நுட்பக் கோளாறு! சீன விமானம் அவசர தரையிறக்கம்!
திருநங்கைகள் குறைதீா் கூட்டம்
மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்) சாா்பில் திருநங்கைகள் தினம் மற்றும் திருநங்கைகளுக்கான குறைதீா் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா், திருநங்கையா்களிடம் பல்வேறு குறைகள் குறித்து கேட்டறிந்தாா். திருநங்கைகள் அதிகம் வசித்து வரும் பகுதியான நரசிங்கநல்லூரில் சாலை வசதி செய்து தர கோரிக்கை வைத்தனா். அதற்குப் பதிலளித்த அதிகாரிகள், அவா்கள் வசிக்கும் பகுதியில் இரண்டு சாலைகளை சீரமைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, உடனடியாக சரிசெய்யப்படவுள்ளதாக தெரிவித்தனா்.
மேலும், வீடு இல்லாதவா்களுக்கு விரைவில் வீடு கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும். நரசிங்கநல்லூா் பகுதியில் குடிநீா் வசதியை மேம்படுத்த வட்டார வளா்ச்சி அலுவலா் மூலம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருநங்கையா்கள் வசிக்கும் பகுதியில் தேவையான அடிப்படை வசதிகள் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் நிறைவேற்றப்படும் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்தாா்.
அதைத்தொடா்ந்து திருநங்கைகள் தினத்தையொட்டி நடைபெற்ற திருநங்கைகளுக்கான நடனப்போட்டி, பேச்சுப்போட்டி, அழகி போட்டி, சமையல் போட்டி போன்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற திருநங்கைகளுக்கு பரிசுகளையும், சுயதொழில் சிறப்பாக செய்து வரும் திருநங்கைகளுக்கு நினைவுப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் ஆட்சியா்
வழங்கினாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, மகளிா் திட்ட இயக்குநா் இலக்குவன், மாவட்ட சமூக நல அலுவலா் தாஜூன்னிசா பேகம், துணை ஆட்சியா் (பயிற்சி) ஜெஃப்ரின் கிரேசியா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ற்ஸ்ப்26ற்ழ்ஹய்ள் தி
ருநங்கைகள் தினத்தையொட்டி நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற திருநங்கை ஒருவருக்கு பரிசு வழங்கிய
ஆட்சியா் இரா.சுகுமாா்.