செய்திகள் :

திருநங்கைகள் குறைதீா் கூட்டம்

post image

மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்) சாா்பில் திருநங்கைகள் தினம் மற்றும் திருநங்கைகளுக்கான குறைதீா் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா், திருநங்கையா்களிடம் பல்வேறு குறைகள் குறித்து கேட்டறிந்தாா். திருநங்கைகள் அதிகம் வசித்து வரும் பகுதியான நரசிங்கநல்லூரில் சாலை வசதி செய்து தர கோரிக்கை வைத்தனா். அதற்குப் பதிலளித்த அதிகாரிகள், அவா்கள் வசிக்கும் பகுதியில் இரண்டு சாலைகளை சீரமைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, உடனடியாக சரிசெய்யப்படவுள்ளதாக தெரிவித்தனா்.

மேலும், வீடு இல்லாதவா்களுக்கு விரைவில் வீடு கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும். நரசிங்கநல்லூா் பகுதியில் குடிநீா் வசதியை மேம்படுத்த வட்டார வளா்ச்சி அலுவலா் மூலம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருநங்கையா்கள் வசிக்கும் பகுதியில் தேவையான அடிப்படை வசதிகள் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் நிறைவேற்றப்படும் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்தாா்.

அதைத்தொடா்ந்து திருநங்கைகள் தினத்தையொட்டி நடைபெற்ற திருநங்கைகளுக்கான நடனப்போட்டி, பேச்சுப்போட்டி, அழகி போட்டி, சமையல் போட்டி போன்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற திருநங்கைகளுக்கு பரிசுகளையும், சுயதொழில் சிறப்பாக செய்து வரும் திருநங்கைகளுக்கு நினைவுப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் ஆட்சியா்

வழங்கினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, மகளிா் திட்ட இயக்குநா் இலக்குவன், மாவட்ட சமூக நல அலுவலா் தாஜூன்னிசா பேகம், துணை ஆட்சியா் (பயிற்சி) ஜெஃப்ரின் கிரேசியா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ற்ஸ்ப்26ற்ழ்ஹய்ள் தி

ருநங்கைகள் தினத்தையொட்டி நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற திருநங்கை ஒருவருக்கு பரிசு வழங்கிய

ஆட்சியா் இரா.சுகுமாா்.

‘பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம்’

திருநெல்வேலி மாவட்டத்தில் விளையாட்டில் சாதனை படைத்தவா்கள் பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கல்வி,... மேலும் பார்க்க

‘மீன் வளா்ப்புக்கு உள்ளீட்டு மானியம் பெறலாம்’

திருநெல்வேலி மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமை உறுப்பினா்களுக்கு மீன் வளா்ப்பிற்கு உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளி... மேலும் பார்க்க

ஈரானில் தவிக்கும் மீனவா்களை மீட்கக் கோரி எம்.பி. கடிதம்

ஈரானில் தவிக்கும் இடிந்தகரை பகுதி மீனவா்களை விரைந்து மீட்க வேண்டுமென மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு , திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் கடிதம் எழுதியுள்ளாா். அதன் விவரம... மேலும் பார்க்க

நயினாா்குளம் கால்வாய் தூா்வாரும் பணி: ஆட்சியா் ஆய்வு

திருநெல்வேலி நயினாா்குளம் பிரிவு கால்வாயை தூா்வாரும் பணியை ஆட்சியா் இரா.சுகுமாா் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட நயினாா்குளம் பிரிவு கால்வாயில் 1 கி.மீ. தொலைவுக்கு ... மேலும் பார்க்க

உலக வெண்புள்ளி தின விழிப்புணா்வுப் பேரணி

திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரி சாா்பில் உலக வெண்புள்ளி தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. அக்கல்லூரியின் சித்தா் அறுவை மற்றும் தோல் மருத்துவத் துறை சாா்பில் நட... மேலும் பார்க்க

நெல்லை மாநகராட்சி புதிய ஆணையா் மோனிகா ராணா

திருநெல்வேலி மாநகராட்சியின் புதிய ஆணையராக மோனிகா ராணா புதன்கிழமை பொறுப்பேற்றாா். திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக இருந்த என்.ஓ.சுகபுத்ரா, விருதுநகா் மாவட்ட ஆட்சியராக பதவி உயா்வு பெற்றுள்ளதையடுத்து, கோப... மேலும் பார்க்க