செய்திகள் :

திருநெல்வேலி: சேதமடைந்த விளையாட்டு உபகரணங்கள்; பாழாகும் சிறுவர் பூங்கா... சீரமைக்கப்படுமா?

post image

திருநெல்வேலி மாவட்டத்தில் தபால் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா, கொரோனா ஊரடங்குக்குப் பிறகு முறையான பராமரிப்பு இல்லாமல் தற்போது பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஒருகாலத்தில் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் விளையாடிய இந்த பூங்கா, தற்போது புல்வெளிகள் மூடிய, பழுதடைந்த விளையாட்டு உபகரணங்களுடன் காணப்படுகிறது.

இந்த பூங்காவுக்கு அருகில் ஐந்து பள்ளிகள் செயல்பட்டு வருவதால், பள்ளி முடிந்த பிறகு மாணவர்கள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் இங்கு வந்து பொழுதைக் கழிப்பதும், சிறுவர்கள் விளையாடுவதும் வழக்கமாக இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகப் பூங்கா முறையாகப் பராமரிக்கப்படாமல் இருக்கிறது. விளையாட்டு சாதனங்கள் உடைந்தும், சுத்தம் இல்லாமலும் உள்ளதால் குழந்தைகள்  விளையாட இடம் இல்லாத நிலை உருவாகியுள்ளது.

பூங்காவின் இத்தகைய நிலையைக் கவனத்தில் கொண்டு, பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கூறியும், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு விளையாட்டு பூங்கா என்பது மிக முக்கியமானது.

எனவே, புதிய உபகரணங்களைப் பொருத்தி, மரங்கள் நட்டு, பூங்காவைச் சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

டெல்லி மதராஸி காலனி: 370 தமிழர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.12,000; உதவிக்கரம் நீட்டிய தமிழக அரசு

டெல்லி மதராசி காலனி அகற்றப்பட்ட போது தமிழர் குடும்பங்களுக்கு எல்லா வகையிலும் உதவிகளை தமிழ்நாடு அரசு செய்வதற்குத் தயாராக இருக்கிறது எனத் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார்.அதன... மேலும் பார்க்க

தரமணி: தொழில்நுட்பக் கல்லூரி சாலையின் அவலநிலையை சுட்டிக்காட்டிய விகடன்; நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

சென்னை தரமணி, மத்திய தொழில்நுட்பக் கல்லூரி(CPT) நுழைவு வாயில் ஒட்டி பிரியும் சாலை, பரபரப்பான ராஜிவ் காந்தி சாலையையும், குடியிருப்பு பகுதிகளான ஸ்ரீராம் நகர் , பள்ளிப்பட்டு, களிகுன்றம் போன்ற பகுதிகளையும... மேலும் பார்க்க

அணைக்கட்டு: தேங்கி நிற்கும் மழைநீரால் நோய்த்தொற்று அபாயம்- அரசு பள்ளியை கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே அகரம் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். சமீபத்தில் வேலூரில்... மேலும் பார்க்க

Bike Taxi to Bike Parcel: தடைக்குப் பிறகும் தொடரும் ola, Rapido பைக் டாக்ஸி சேவை.. எப்படி?

கர்நாடக மாநிலத்தில் ஓலா, ரேபிடோ, ஊபர் உள்ளிட்ட பைக் டாக்ஸி சேவைகளை ஜூன் 16 ஆம் தேதி முதல் நிறுத்த வேண்டும் என்று உத்திரவிட்டுள்ளது உயர்நீதிமன்றம்.பெங்களூரு போன்ற பெருநகரங்களில் பைக் டாக்ஸி சேவை மக்களு... மேலும் பார்க்க

Plane crash: ``அவன் கடைசியாக சொன்ன வார்த்தை..'' - பலியான விமானியின் தந்தை கூறி அழுத சோகம்

அகமதாபாத் விமான விபத்து நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 240-க்கும் மேற்பட்டோர் இந்த கோர விபத்தில் உயிரிழந்திருக்கின்றனர். அந்த விமானத்தில் பயணித்த குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூப... மேலும் பார்க்க

``1988-ல் நடந்த விமான விபத்து; போதுமான இழப்பீடு வழங்கவில்லை..'' - 37 ஆண்டுகள் போராடும் குடும்பங்கள்

அகமதாபாத்தில் கடந்த வியாழக்கிழமை நடந்த ஏர் இந்தியா ட்ரீம்லைனர் விமான விபத்து, ஒரு பெரும் சோக நிகழ்வாக அமைந்துள்ளது. இந்த கோர விபத்தில் சனிக்கிழமை நிலவரப்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்து... மேலும் பார்க்க