செய்திகள் :

திருப்பதி மெடிகேரில் ரூ.1,050 கோடி முதலீடு செய்யும் கோட்டக்!

post image

மும்பை: கோடக் அல்டெர்னட் அசெட் மேனேஜர்ஸ் லிமிடெட் இன்று திருப்பதி மெடிகேரில் ரூ.1,050 கோடி முதலீடு செய்வதாக அறிவித்தையடுத்து, நிறுவனத்தின் விரிவாக்க முயற்சிகளுக்கு இது ஊக்குவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கு முன்னதாக நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த அஃபிர்மா கேபிடல் முழுவதுமாக வெளியேறும் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது திருப்பதி மெடிகேர்.

2005ல் நிறுவப்பட்ட திருப்பதி மெடிகேர் ஊட்டச்சத்து மருந்து உற்பத்தியில் மிகப்பெரிய உற்பத்தியாளராக இருப்பதால் ஹெர்பலைஃப், கிளான்பியா, அபோட், டோரண்ட், டாக்டர் ரெட்டிஸ் மற்றும் ஃபைசர் உள்ளிட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார் கோடக் அல்டெர்னட் அசெட் மேனேஜர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ஈஸ்வர்.

கோட்க் அல்டெர்னட் பங்குதாரரான ராகுல் ஷா இது குறித்து தெரிவிக்கையில், நிறுவனம் தற்போது உள்நாட்டு சந்தையில் கணிசமான வளர்ச்சியை நோக்கி செல்வதாகவும், விரைவில் ஏற்றுமதி பிரிவில் முத்திரை பதிப்போம் என்றார்.

நிறுவனத்தின் இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அசோக் கோயல், நாங்கள் வணிக தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் புதுமையை புகுத்துவோம் என்றார்.

இதையும் படிக்க: 25 முக்கியமான நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விட மத்திய அரசு முடிவு!

தமிழ்நாட்டில் அதிவேக டேட்டாவை வழங்குகிறது ஜியோ! காரணம் என்ன?

மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் அதிவேக இணைய சேவையை ஜியோ நிறுவனம் வழங்குகிறது. இதற்குக் காரணம், ஜியோ நிறுவனம் தனது அலைதிறனை மேம்படுத்தியதுதான் என வல்லுநர்கள் கூறுகின்றனர். அதாவது, 5ஜி இணைய ... மேலும் பார்க்க

ஐபிஎல் ரசிகர்களுக்காக... இன்றுடன் முடிகிறது ஜியோ வழங்கிய சலுகை!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ரசிகர்களுக்காக ஜியோ நிறுவனம் வழங்கிய சலுகை இன்றுடன் (மார்ச் 31) நிறைவு பெறவுள்ளது. மேலும் பார்க்க

ஆர்டிஃபெக்ஸ் நிறுவனத்தின் 80% பங்குகளை கையகப்படுத்தும் டாடா ஆட்டோகாம்ப்!

புதுதில்லி: ஜாகுவார் லேண்ட் ரோவர் குழுமத்தின் அங்கமான ஆர்டிஃபெக்ஸ் இன்டீரியர் சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் 80% பங்குகளை வெளியிடப்படாத தொகைக்கு கையகப்படுத்த போவதாக டாடா ஆட்டோகாம்ப் இன்று தெரிவித்தது... மேலும் பார்க்க

நிகழாண்டில் 46 கிளைகளைத் திறந்த கரூர் வைஸ்யா வங்கி!

சென்னை: தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கி 2024-25 ஆம் நிதியாண்டில் இது வரை 46 கிளைகளை நிறுவியுள்ளதாக தெரிவித்துள்ளது.சமீபத்தில் கும்பகோணம், விசாகப்பட்டினம், கோயம்புத்தூர் மற்றும் சென்னை ஆலப்... மேலும் பார்க்க

ரூ.700 கோடியில் படைகள் போக்குவரத்து வாகனங்கள்: அசோக் லேலண்ட் ஒப்பந்தம்

இந்திய பாதுகாப்புப் படைகள் போக்குவரத்துக்கான வாகனங்களை வழங்க பாதுகாப்புத் துறையுடன் ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து நிறுவனம் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

கரூா் வைஸ்யா வங்கியின் மேலும் 4 புதிய கிளைகள்

முன்னணி தனியாா் வங்கிகளில் ஒன்றான கரூா் வைஸ்யா வங்கி (கேவிபி), மேலும் மூன்று நான்கு புதிய கிளைகளை தென்னகத்தில் திறந்துள்ளது. இதுகுறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... மேலும் பார்க்க