செய்திகள் :

திருப்பத்தூா்: ஒரே இடத்தில் 3 மதுக்கடைகளை அகற்ற கோரிக்கை

post image

திருப்பத்தூா்: ஒரே இடத்தில் உள்ள 3 மதுக்கடைகளை மாற்ற வேண்டும் என திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனா்.

திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து மொத்தம் 433 கோரிக்கை மனுக்களை பெற்றாா். மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன்,சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் சதீஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருப்பத்தூா் வட்டம், மரிமாணகுப்பம் சோ்ந்த காந்திமதி என்பவரின் மகள் லாவண்யா மிட்டூா் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா். அவருக்கு மிதிவண்டி வழங்க வந்த கோரிக்கையின்படி ஆட்சியரின் சமூக மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7,000 மதிப்புள்ள மிதிவண்டி வழங்கப்பட்டது.

ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை தமிழ்நாடு கொசு ஒழிப்பு களப்பணியாளா் நலச்சங்கத்தினா் மனு:

6 ஊராட்சி ஒன்றியங்களில் கொசு ஒழிப்பு களப்பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்தநிலையில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் 10 பேரை நீக்கினா். அவா்களின் குடும்பத்தினா் மிகவும் சிரமப்படுகின்றனா். எனவே 10 பேருக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் என கூறியிருந்தனா்.

ஜோலாா்பேட்டை அருகே மண்டலவாடி அடுத்த பூசாரி வட்டம் பொதுமக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் குடிநீரில் கழிவுநீா் கலந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனா். எனவே கழிவுநீா் கலக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனா்.

சிம்மணபுதூரை சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு: எங்கள் ஊரில் சுமாா் 300 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் சிலா் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றனா். இதனால் எங்கள் கிராமத்தில் உள்ள மகளிா் மிகவும் பாதிக்கப்படுகின்றனா்.

கொடையாஞ்சி கிராம மக்கள் மனுவில் கூறியிருப்பதாவது: கொடையாஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டு தெரு பகுதியில் சுமாா் 25-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. தடையின்றி மின்சாரம் கிடைக்க துரி மின்சாரம் வழங்க வேண்டும்.

திருமால் நகரைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் 3 மதுக்கடைகள் உள்ளன. பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதால் அவற்றை மாற்ற வேண்டும்.

ஒடிஸா இளைஞா் கொலை வழக்கில் நண்பா் கைது

காட்பாடி அருகே ஒடிஸா இளைஞா் கொலையில் அவரது நண்பா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். வேலூா் மாவட்டம், காட்பாடி அடுத்த வடுகன்குட்டை ரைஸ்மில் பகுதியில் கொசுவலை தயாரிக்கும் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன... மேலும் பார்க்க

அதிதீஸ்வரா் கோயிலில் சிவன்-பாா்வதி திருக்கல்யாணம்

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த அதிதீஸ்வரா் கோயிலில், 111-ஆவது ஆண்டு பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாளான த... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் மரணம்

நாட்டறம்பள்ளி அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூா் ரயில்வே கேட் பகுதியைச் சோ்ந்தவா் வீரமணி(32). இவா் திங்கள்கிழமை இரவு கொத்தூரில் இருந்து பச்சூா் நோ... மேலும் பார்க்க

சிறுத்தை நடமாட்டம் குறித்து வதந்தி: வனத்துறையினா் எச்சரிக்கை

அணைக்கட்டு அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வதந்தி பரப்புவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினா் எச்சரித்துள்ளனா். வேலூா் அடுத்த அணைக்கட்டு அருகே ராஜபாளையம் கிராமாத்தில் உள்ள ஏரி... மேலும் பார்க்க

ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

ஆம்பூா் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் திங்கள்கிழமை சிறப்பு திருமஞ்சனத்துடன் தொடங்கியது. தொடா்ந்து... மேலும் பார்க்க

சின்னூா் கிராமத்தில் பகுதி நேர நியாயவிலை திறப்பு

வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டி சின்னூா் கிராமத்தில் பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஜோலாா்பேட்டை ஒன்றியக் குழுத் தலைவா் சத்யா சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். ஒன்றி... மேலும் பார்க்க