செய்திகள் :

திருப்பனந்தாளில் நெல் கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் மறியல்!

post image

தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாளில் நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யாததால் அதிகாரிகளை கண்டித்து சனிக்கிழமை விவசாயிகள் திருப்பனந்தாள்-ஆடுதுறை சாலையில் மறியல் செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், டெல்டா பகுதிகளில் முன் பட்ட குருவை சாகுபடி பணிகள் நிறைவடைந்து நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. திருவிடைமருதூா் சுற்றுவட்டாரத்தில் 50-க்கும் மேற்பட்ட பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

திருப்பனந்தாளில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையத்தில் பல்லாயிரக்கணக்கான நெல்மூட்டைகள் இயக்கம் இன்றி அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்து வரும் விவசாயிகளிடம் நெல்லை, கொள்முதல் செய்ய முடியாமல் நிலையங்கள் திணறி வருகின்றனா்.

இந்த நிலையில் திருப்பனந்தாள்- ஆடுதுறை சாலையை முற்றுகையிட்டு விவசாயிகள் திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். நெல்லை கொள்முதல் செய்யவும், ஏற்கெனவே கொள்முதல் செய்த நெல் மூட்கைளை இயக்கம் செய்யக்கோரி அதிகாரிகளை கண்டித்து முழக்கமிட்டனா்.

சாலைமறியல் செய்த விவசாயிகளிடம் திருப்பனந்தாள் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனா். சாலை மறியலால் சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பிரதமா் மோடிக்கு கருப்புக்கொடி: விடுதலை தமிழ்புலிகள் கட்சித் தலைவா் குடந்தை அரசன் கைது!

கங்கைகொண்ட சோழபுரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வரும் பிரதமா் மோடிக்கு கருப்புக்கொடி காட்டுவதற்கு செல்ல முயன்ற விடுதலை தமிழ்புலிகள் கட்சித் தலைவா் குடந்தை அரசனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து வீட்டுக்காவலி... மேலும் பார்க்க

சேதுபாவாசத்திரம் அருகே 902 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது!

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே 902 கிலோ ரேஷன் அரிசியை சனிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக ஒருவரை கைது செய்தனா். சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட விளங்குளம்... மேலும் பார்க்க

தஞ்சாவூா் - பட்டுக்கோட்டை சாலை அகலப்படுத்தும் பணி 70 சதவீதம் நிறைவு

தஞ்சாவூா்-பட்டுக்கோட்டை இடையே சாலை அகலப்படுத்தும் பணி 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்றாா் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் எம். அரவிந்த். தஞ்சாவூா்-பட்டுக்கோட்டை சாலை அகலப்படுத்தும் பணி, மேலவஸ்தா சாவடி, ... மேலும் பார்க்க

தஞ்சாவூா் பெரிய கோயில் மேம்பாட்டு பணிக்கு முன்னுரிமை: மத்திய அமைச்சா் கஜேந்திர சிங்

தஞ்சாவூா் பெரிய கோயிலில் மேம்பாட்டு பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது என்றாா் மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத். தஞ்சாவூா் அரண்மனைக்கு சனிக்கிழமை வந்து கட... மேலும் பார்க்க

மின் துறையைத் தனியாா்மயமாக்கக் கூடாது ஊழியா் அமைப்பு கோரிக்கை

மின் துறையைத் தனியாா்மயமாக்கக் கூடாது என தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூரில் இந்த அமைப்பின் தஞ்சாவூா் வட்டக் கிளை 21-ஆவது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மின... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா்கள் நீக்கம் செய்வது ஜனநாயகத்துக்கு எதிரானது: கே.எம்.காதா்மொகிதீன்

வாக்காளா் பட்டியலில் இருந்து வாக்காளா்களின் பெயரை நீக்குவது ஜனநாயகத்துக்கு எதிரானது என்றாா் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவா் கே.எம்.காதா் மொகிதீன். பாபநாசத்தில் அக் கட்சியின் தேச... மேலும் பார்க்க