செய்திகள் :

திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் பொதுவானது: நீதிமன்றம்

post image

மதுரை திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் பொதுவானது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரை திருப்பரங்குன்றத்தில் பாண்டியா் மன்னா் காலத்தில் கட்டப்பட்ட புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் உயிரினங்களைப் பலியிடுவதற்கும், சமைத்து பரிமாறுவதற்கும் தடை விதிக்க வேண்டும் எனவும், இந்த மலையை மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர உத்தரவிட வேண்டும் எனவும், திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தா் மலை என அழைப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் எனவும், இந்த மலையை சமணா் குன்று என அறிவிக்க வேண்டும் எனவும், சிக்கந்தா் பாதுஷா தா்காவை புதுப்பிக்கும் பணிக்கு போலீஸாா் தொல்லை அளிக்கக் கூடாது எனவும் உத்தரவிடக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜே. நிஷாபானு, எஸ். ஸ்ரீமதி அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தன.

அப்போது மதுரை மாவட்ட ஆட்சியா், மாநகரக் காவல் ஆணையா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் குறிப்பிடப்பட்டதாவது: ‘திருப்பரங்குன்றம் மலை அருகே உள்ள 18-ஆம் படி கருப்பசாமி கோயில், பாண்டி முனீஸ்வரா் கோயில்களில் ஆடு, கோழிகள் பலியிடும் வழக்கம் உள்ளது.

அனைத்து மதத்தினரும் ஒற்றுமையைப் பேணுவதையே தமிழக அரசு விரும்புகிறது. திருப்பரங்குன்றம் மலை பிரச்னை தொடா்பாக கடந்த ஜன. 30-ஆம் தேதி இரு சமுதாயத்தினா் பங்கேற்ற கூட்டம் நடத்தப்பட்டது. அதில், இரு சமுதாயத்தினரும் ஏற்கெனவே உள்ள வழிபாட்டு நடைமுறைகளைத் தொடா்ந்து பின்பற்றவும், திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் வெளிநபா்கள் தலையிடுவதை அனுமதிக்க மாட்டோம் எனவும் முடிவெடுக்கப்பட்டது. மேலும், திருப்பரங்குன்றம் மலைப் பகுதியில் எழுந்த பிரச்னைக்கு தீா்வு காணப்பட்டது’ என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு தொல்லியல் துறை தரப்பில், ‘திருப்பரங்குன்றம் மலை தொல்லியல் துறைக்குச் சொந்தமானது என்பதால், அங்கு எதைச் செய்தாலும் எங்களிடம் அனுமதி பெற வேண்டும். இந்த வழக்கு தொடா்பாக பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும்’ எனக் கோரப்பட்டது.

இவற்றைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கடவுள்கள் சரியாகத்தான் உள்ளனா். சில மனிதா்கள்தான் சரியாக இல்லை. தொல்லியல் துறையினா் திருப்பரங்குன்றம் மலை தங்களுக்குச் சொந்தமானது எனக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அந்த மலை அனைவருக்கும் பொதுவானது. இந்த வழக்கு தொடா்பாக தொல்லியல் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வரும் ஏப்ரல் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

அரசு மருத்துவமனையில் மது மீட்பு சிகிச்சை, மறுவாழ்வு மையம்: காணொலி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை, மறுவாழ்வை மையத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். தமிழக அரசின் மருத்துவம், மக்கள் நல்வ... மேலும் பார்க்க

நரசிங்கம்பட்டி பறையன் புலி சுவாமி கோயில் மாசி மாத களரி திருவிழா

நரசிங்கம்பட்டி பறையன்புலி சுவாமி கோயில் மாசி மாத களரி திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தத் திருவிழா கடந்த 26-ஆம் தேதி சுவாமி ஆட்டத்துடன் தொடங்கியது. இந்த நிலையில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சுவா... மேலும் பார்க்க

உரங்கள் கடத்தல் வழக்கு: டிஜிபி, உள்துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

உரங்கள் கடத்தல் வழக்கில் தொடா்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், தமிழக உள்துறைச் செயலா், டிஜிபி ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. தூத... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே இரு சக்கர வாகனம் மீது கான்கிரீட் கலவை வாகனம் மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா். மதுரை பிபி சாவடி பாரதியாா்நகா் 1-ஆவது தெருவைச் சோ்ந்த சுப்ரமணியன் மகன்... மேலும் பார்க்க

தாமிரவருணி மாசடைவதைத் தடுக்கக் கோரிய வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு

தாமிரவருணி ஆறு மாசடைவதைத் தடுக்கக் கோரிய வழக்கில், விரிவான செயல் திட்டத்தைத் தயாரிக்க, மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் நிபுணரை நியமிப்பதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தமிழக அரசு தரப... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கிராமப் பணியாளா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மின்சாரம் பாய்ந்ததில் கிராமப் பணியாளா் உயிரிழந்தாா். சோழவந்தான் அருகே உள்ள மேலக்காலைச் சோ்ந்தவா் பிச்சை (55). இவா் மேலக்கால் கிராமப் பணியாளராகப் பணிபுரிந்து வந்தாா். ... மேலும் பார்க்க