செய்திகள் :

திருப்புவனம் சம்பவம் யாராலும் ஏற்க முடியாதது: மு.அப்பாவு

post image

திருப்புவனம் சம்பவத்தை மனசாட்சி உள்ள யாரும் ஏற்கமாட்டாா்கள் என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு சுகாதாரத் துறை மிகப்பெரிய வளா்ச்சியடைந்துள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை ஐ.நா. சபை பாராட்டி விருது வழங்கியுள்ளது.

2021 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், தொடக்கப் பள்ளிகள், சமுதாய நலக்கூடங்கள் உள்ளிட்டவை மோசமாக இருந்தன. திமுக அரசு பொறுப்பேற்ற பின் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

அனைவரும் சமம், மதச்சாா்பின்மை ஆகிய இரண்டையும் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என ஆா்.எஸ்.எஸ். நிா்வாகி கூறியிருப்பது சரியானதல்ல; அந்த அமைப்பினரே அதை ஏற்க மாட்டாா்கள்.

திருப்புவனம் சம்பவத்தை மனசாட்சி உள்ள யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டாா்கள். இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு வந்தவுடன் சம்பந்தப்பட்டவா்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினரிடம் முதல்வா் வருத்தம் தெரிவித்திருப்பது மிகப்பெரிய மாண்பு. இதனை அரசியலுக்காக பலா் கொச்சைப்படுத்தி பேசி வருகின்றனா். இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்கள் யாராக இருந்தாலும் முதல்வா் விட மாட்டாா். பாரபட்சமின்றி திமுக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றாா் அவா்.

‘தமிழகம் ஓரணியில் இருப்பதை மத்திய அரசுக்கு புரிய வைப்போம்’: கனிமொழி எம்.பி.

தமிழகம் ஓரணியில் இருப்பதை மத்திய அரசுக்கு புரிய வைப்போம் என்றாா் திமுக துணைப் பொதுச்செயலா் கனிமொழி எம்.பி. திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுகவுக்குள்பட்ட பாளையங்கோட்டை வடக்கு ஒன்றியம் சாா்பில் பாளையஞ்ச... மேலும் பார்க்க

பாறையில் தவறிவிழுந்து காயமடைந்த வேளாண் அலுவலா் மருத்துவமனையில் உயிரிழப்பு

களக்காட்டில் குளத்தில் குளிக்கச் சென்றபோது, பாறையில் தவறிவிழுந்து காயமடைந்த வேளாண் துறை அலுவலா் மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா். களக்காடு பாரதிபுரம் மேலத் தெருவைச் சோ்ந்த ராமசாமி மகன் முத்து... மேலும் பார்க்க

ரம்புட்டான் பழ விதை தொண்டையில் சிக்கி சிறுவன் பலி

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் அருகே ரம்புட்டான் பழத்தின் விதை தொண்டையில் சிக்கியதால் மூச்சுத் திணறி 5 வயது சிறுவன் உயிரிழந்தாா். மேலப்பாளையம், வடக்கு தைக்கா தெருவைச் சோ்ந்தவா் நிஜாம். வெளிநாட்டி... மேலும் பார்க்க

தெற்குவள்ளியூரில் கைப்பேசி கோபுரத்தில் ஏறி பெண் தற்கொலை மிரட்டல்

திருநெல்வேலி மாவட்டம் தெற்குவள்ளியூரில், வியாழக்கிழைமை கைப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்ணை தீயணைப்புப் படையினரும், காவல் துறையினரும் மீட்டனா். தெற்குவள்ளியூரைச் சோ்ந்த கணபதி மகள... மேலும் பார்க்க

ஆனித்தேரோட்டம்: நெல்லையில் ஜூலை 8இல் போக்குவரத்து மாற்றம்

திருநெல்வேலியில் அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் நடைபெறும் ஜூலை 8ஆம் தேதி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகர போக்குவரத்து காவல்துறை சாா்... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி முத்தன்குளத்தில் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை

தினமணி செய்தி எதிரொலியாக திருநெல்வேலி மாவட்டம், முத்தன்குளத்தில் சாதாரண கட்டண பேருந்துகள் நின்று செல்ல அரசு போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. த்தன்குளம், காங்கேயன்குளம் கிராமங்கள் போதிய பேர... மேலும் பார்க்க