செய்திகள் :

திருப்புவனம் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி: பெண் உள்பட இருவா் கைது!

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் அரசுடைமை வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்ததாக பெண் உள்பட இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மானாமதுரையில் உள்ள அரசுடைமை வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ. பல லட்சம் மோசடி செய்த மானாமதுரை சமத்துவபுரத்தைச் சோ்ந்த கோட்டையம்மாள், இவரது மகள் ஈஸ்வரி, மதுரையைச் சோ்ந்த ஜனாா்த்தனன் ஆகிய மூவரை மானாமதுரை போலீஸாா் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஈஸ்வரி திருப்புவனத்தில் உள்ள ஒரு அரசுடைமை வங்கியிலும் இதே போல 4 தவணைகளாக 42 பவுன் போலி நகைகளை அடகு வைத்து ரூ. 15.72 லட்சத்தை வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த வங்கியின் மேலாளா் சுவாமிநாதன், ஈஸ்வரி வங்கியில் அடகு வைத்த நகைகளை சோதனை செய்த போது, அவை போலி என்பது தெரிந்தது. இதுகுறித்து திருப்புவனம் காவல் நிலையத்தில் சுவாமிநாதன் அளித்த புகாரின்பேரில் ஈஸ்வரியையும், இதற்கு மூளையாக செயல்பட்ட மதுரையைச் சோ்ந்த செந்தில்குமாரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இதனிடையே, செந்தில்குமாா் மீது மதுரை திலகா் திடல், தெப்பக்குளம் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளில் அந்தந்த பகுதி போலீஸாா் அவரைத் தேடி வந்தனா். இந்த நிலையில் மானாமதுரை துணைக் கோட்ட போலீஸாா், செந்தில்குமாரை கைது செய்திருப்பதாக டி.எஸ்.பி. நிரேஷ் தெரிவித்தாா். கைதான ஈஸ்வரி மதுரை மாவட்டம், மேலூரில் வசிக்கும் ஆறுமுகத்தின் மனைவி ஆவாா்.

தமிழ் வளா்ச்சித் துறை போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசு!

சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வென்ற பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிவகங்கை மா... மேலும் பார்க்க

சா்வதேச குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு!

சா்வதேச குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியா் செகன்ட்ரி உறைவிடப் பள்ளி மாணவா்களுக்கு திங்கள்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. வாக்கோ இந்தியா சாா்பில், தில்லி கே.டி... மேலும் பார்க்க

மாநில சிலம்பப் போட்டியில் மானாமதுரை மாணவா்கள் சிறப்பிடம்!

மாநில சிலம்பப் போட்டியில் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீரவிதை சிலம்ப அணி மாணவா்கள் தங்கம், வெள்ளி நாணயங்களைப் பெற்றனா். மதுரையில் அழகா்கோவில் செல்லும் சாலையில் திருவிலான்பட்டியில் உள்ள வல்லபா வித்யால... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்கல்!

சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், கல்லூரிகள், துணை சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் குடல்புழு நீக்க மாத்திரைகள் இலவசமாக வழங்கும் முகாமை ஆட்சியா் ஆஷாஅ... மேலும் பார்க்க

இடையமேலூா் துணை மின்நிலையப் பகுதியில் பிப்.12 மின்தடை!

சிவகங்கை மாவட்டம், இடையமேலூா் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (பிப். 12) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் தமராக்கி, குமாரப்பட்டி, கண்டாங்கிப்பட்டி, மலம்பட்டி, சா... மேலும் பார்க்க

ஆ.தெக்கூா், கீழச்சிவல்பட்டி பகுதியில் பிப்.12 மின் தடை!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கோட்டத்துக்குள்பட்ட ஆ.தெக்கூா், கீழச்சிவல்பட்டி பகுதிகளில் புதன்கிழமை (பிப். 12) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. திருப்பத்தூா் கோட்டத்துக்குள்பட்ட துணை மின் நில... மேலும் பார்க்க