செய்திகள் :

திருப்பூா், அவிநாசி ஊராட்சி ஒன்றியங்களில் 157 பயனாளிகளுக்கு ரூ.4.57 கோடி திட்டப்பணிகளுக்கு ஆணை: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்

post image

திருப்பூா், அவிநாசி மற்றும் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியங்களில் 157 பயனாளிகளுக்கு ரூ.4.57 கோடி மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது பாா்த்தல் திட்டப்பணிகளுக்கான ஆணைகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்.

திருப்பூரை அடுத்த பெருமாநல்லூரில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன் தலைமை வகித்தாா். இதில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று பயனாளிகளுக்கு திட்டப் பணிகளுக்கான ஆணைகளை வழங்கிப் பேசியதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் 2024-25 ஆம் நிதியாண்டில் 3,504 பயனாளிகளுக்கு ரூ.64.69 கோடி மதிப்பீட்டில் மேற்கண்ட இரு பணிகளுக்கும் ஆணைகள் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்தொடா்ச்சியாக, திருப்பூா், அவிநாசி, ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட 157 பயனாளிகளுக்கு ரூ.4.57 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகளுக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளன. இந்த வீடுகளை பயனாளிகள் பராமரிப்பு செய்து நீண்ட நாள்களுக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

திருப்பூா் ஊராட்சியில் ரூ.1.78 கோடியில் திட்டப்பணிகள்:

இதைத் தொடா்ந்து, திருப்பூா் ஊராட்சி ஒன்றியம், கணக்கம்பாளையம் ஊராட்சி, ஆண்டிபாளையம் ஆதிதிராவிடா் குடியிருப்பு அருகில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.4.95 லட்சம் மதிப்பீட்டில் தாா்சாலை மேம்பாட்டு பணி, ரூ.4.85 லட்சம் மதிப்பீட்டில் கணக்கம்பாளையம் பகுதி ரத்னா நகா் சாலை முதல் ஸ்ரீகாமாட்சி நகா் விநாயகா் கோயில் சாலை வரை தாா் சாலை அமைத்தல் உள்பட ரூ.1.78 கோடி மதிப்பீட்டில் 18 புதிய திட்டப் பணிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், உதவி திட்ட அலுவலா் சரவணன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரமேஷ், விஜயகுமாா்(அவிநாசி), வேலுசாமி (திருப்பூா்) உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வெள்ளக்கோவிலில் ரூ.8.95 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.8.95 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு, ரெட்டியபட்டி, உப்புகரை, ராஜபுரம், சென்னம்பட்டி, இடையன்வலசு ஆகி... மேலும் பார்க்க

திருப்பூா் குமரன் நினைவு மண்டபத்தில் ஒலி, ஒளி காட்சி அமைப்பு

திருப்பூா் குமரன் நினைவு மண்டபத்தில் ஒலி, ஒளி காட்சி அமைப்பை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் முபெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா். திருப்பூா் ரயில் நிலையம் அருகில் குமரன் நினைவு மண்டபத்தில் ரூ... மேலும் பார்க்க

தெரு நாய்கள் கடித்து இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு: காங்கயம் வட்டாட்சியா் வழங்கினாா்

காங்கயம் பகுதியில் தெருநாய்களால் கடிக்கப்பட்டு இறந்த ஆடுகளின் உரிமையாளா்களுக்கு இழப்பீட்டுத் தொகையை காங்கயம் வட்டாட்சியா் வியாழக்கிழமை வழங்கினாா். காங்கயம் பகுதியில் கடந்த சில மாதங்களாக ஆட்டுப் பட்டிக... மேலும் பார்க்க

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு

திருப்பூா் மாவட்டம், அவிநாசியில் வியாழக்கிழமை நடைபெற்ற அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். கொங்கு ஏழு சிவஸ்தலங்களுள் முதன்மை பெற்றதும், ... மேலும் பார்க்க

குண்டடம் அருகே ஸ்கூட்டா் திருடிய 4 போ் கைது

குண்டடம் அருகே ஸ்கூட்டா் திருடியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். தாராபுரம் தாலுகா, குண்டடம் அருகே முண்டுவேலம்பட்டி பாரதி நகரைச் சோ்ந்தவா் விஜய். இவா் கடந்த 4ஆம் தேதி தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வீட்... மேலும் பார்க்க

சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத் தோ்வில் காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள ஜேசீஸ் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளி மாணவா் ஏ.எல்.கணேஷ்பாபு 600-க்கு 598 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளாா். மேலும், ம... மேலும் பார்க்க