செய்திகள் :

திருமணமான பெண் வேறொரு இளைஞருடன் ஒரே வீட்டில் குடித்தனம்: கர்ப்பத்தில் சந்தேகம்; கழுத்தை நெரித்துக் கொலை!

post image

திருமணமான பெண்ணுடன் லிவ்-இன் டுகெதர் உறவு கொண்டிருந்த இளைஞர் ஒருவர் அந்த பெண்ணை கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்டை நாடான நேபாளத்தைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர் ஹைதராபாத் நகரில் உள்ள ஒரு உணவகத்தில் சமையல் கலைஞராக பணியாற்றி வந்துள்ளார். அவர் அங்குள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார்.

இந்த நிலையில், அவருக்கு பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக் மூலம் நேபாளத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பழக்கமாகி, நாளடைவில் நெருங்கிய தோழியானார். அந்த பெண்மணிக்கு ஏற்கெனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், மேற்கண்ட இருவரும் ஒருவரையொருவர் தீவிரமாக காதலிக்க தொடங்கியுள்ளனர்.

ஒருகட்டத்தில், அன்பின் மிகுதியால் அந்த பெண்மணி இந்த நபரை தேடி ஹைதராபாத் வந்துவிட்டார். இருவரும் ஒரே வீட்டில் லிவ்-இன் டுகெதர் உறவில் திருமணமாகாமலேயே குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில், அந்த பெண்மணி மீண்டுமொருமுறை கர்ப்பம் தரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் அவருடன் தங்கியிருந்த நபருக்கு அந்த பெண் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து இருவருக்குமிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கடந்த மே 23-ஆம் தேதி இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த அந்த நபர் அந்த பெண்ணை கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். அதன்பின், அவரது உடலை துணி அடைக்கும் பை ஒன்றில் அடைத்து ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் வீசிச் சென்றுள்ளார்.

இந்த நிலையில், இளம்பெண்ணின் சடலத்தைப் பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்த காவலாளி ஒருவர், இது குறித்து காவல் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிந்து, குற்றவாளியை கண்டுபிடிக்க 5 குழுக்களையும் அமைத்து விசாரணையை முடுக்கிவிட்டனர்.

சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்ததில் குற்றவாளியான விஜய் என்ற நபரை அடையாளம் கண்ட போலீஸார், மேட்செல் மாவட்டத்தில் பதுங்கியிருந்த அவரை தேடிப் பிடித்து கைது செய்தனர். விசாரணையில், அவர் தாம் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாஜகவை தோலுரித்துக் காட்டியுள்ளார் ராகுல் காந்தி: சிவசேனை தலைவர் சஞ்சய் ராவத்

மும்பை: மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ராவத் ராகுல் காந்திக்கு ஆதரவாக கருத்தை வெளிப்படுத்தி பாஜகவை விமர்சித்துள்ளார். சிவசேனை(உத்தவ் தாக்கரே அணி) கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் பாஜகவையும் மத்திய அரச... மேலும் பார்க்க

பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த பிரதமருக்கு துணிவில்லை! காங்கிரஸ் குற்றச்சாட்டு

பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த பிரதமர் நரேந்திர மோடி துணிவதில்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.இதுகுறித்து, ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், உலகில் உள்ள ஒவ... மேலும் பார்க்க

பிரதமராக ஓராண்டு நிறைவு! பெண்களுக்கான ஆட்சியாக மோடி பெருமிதம்!

பிரதமராக மூன்றாவது முறையாகப் பதவியேற்று, நாளை ஓராண்டு முடிவுறும் நிலையில், பாஜக ஆட்சி குறித்து பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் கூறியுள்ளார்.பாஜக தலைமையிலான ஆட்சி குறித்து பிரதமர் மோடி கூறுகையில், பாஜக... மேலும் பார்க்க

மணிப்பூரில் பதற்றம்! தீக்குளிக்கும் போராட்டக்காரர்கள்?

மணிப்பூரில் மெய்தி அமைப்பின் தலைவர் கைது நடவடிக்கையால் போராட்டக்காரர்கள் தீக்குளிக்கப் போவதாக மிரட்டல் விடுக்கின்றனர்.மணிப்பூரில் மெய்தி சமுதாயத்தின் ஆரம்பை டேங்கோல் அமைப்பின் தலைவர் உள்பட உறுப்பினர்க... மேலும் பார்க்க

தில்லி பேருந்து முன்பு ஸ்டன்ட்! பைக்கை பழைய இரும்புச் சாமான் கடைக்கு அனுப்பிய போலீஸ்

தில்லியில் மாநகரப் பேருந்து முன்பு, வளைந்து வளைந்து ஓட்டிக்கொண்டே, பேருந்தை இயக்கவிடாமல் தொல்லை தந்து, இளைஞர் செய்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், அவரது ராயல் என்ஃபீல்டு பைக்கை, பழைய இரும... மேலும் பார்க்க

மத்திய பிரதேச கொடூரம்: பச்சிளம் சிசுவின் உடலைக் கவ்விச் சென்ற நாய்

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில், உள்ள அரசு மருத்துவமனையின் கழிப்பறை அருகே, தெருநாய் ஒன்று, பச்சிளம் சிசுவின் உடலைக் கவ்விச் சென்றது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பார்க்க